Posts

Showing posts from November 29, 2022
Image
  கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பாதிக்கபட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை NCTE விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு விடியல் தருவாரா?NCTE norms, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட  எங்களுக்கு வேலை கொடுப்பாரா? கலைஞர் போட்ட கையெழுத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உயிர் கொடுப்பாரா? 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் நிரப்பும் நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2011 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது..அதிமுக கொள்கை முடிவு தேர்வு தான் வைப்பார்கள் நிலுவையில் உள்ள காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் என்று கேட்ட போது கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்
Image
  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,414 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் (Primary teachers) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது.  நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.  இதற்கு விண்ணப்பிக்க www.kvsanga
Image
  குரூப் 1 தேர்வுக்கான விடைகள் வெளியீடு... TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு.!!! TNPSC குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடைபெற்றது. 3,22,414 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 1,90,957 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் 4 கேள்விக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
Image
  CTET 2022: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம்; டிச.3 வரை திருத்தங்கள் செய்யலாம்; எப்படி?- விவரம் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 3 வரை திருத்தங்கள் செய்யலாம் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.