27 November 2013

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி 

அரசு உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில்2000தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு,பிளஸ்2மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள்2700,மேனிலைப் பள்ளிகள்2800இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார்10லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில்2000தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில்,இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர். 

உயர்நிலை மேனிலை பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பாட ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் பாடங்களில் உள்ள உள்பிரிவுகளையும் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இதன்படி அறிவியல் பாடத்துக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் என்ற உள்பிரிவுகளை கருத்தில் கொண்டும்,சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு,புவியியல்,பிரிவுகளை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் மொழிப்பாடங்களை பொருத்தவரை ஆங்கிலத்துக்கு தனியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். அதேசமயம் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது குழப்பங்களை அதிகாரிகள் செய்து வருவதாக தமிழாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பதவி உயர்வு மூலம் தமிழாசிரியர்கள் நியமிக்கும் போது, 1988ல் போடப்பட்ட அரசு உத்தரவு686ல் கூறப்பட்டு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழாசிரியர்கள் கேட்கின்றனர். 

அதன்படி பி.டி ஆசியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது,பணியில் சேர்ந்த காலத்தை பணி மூப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப்பின்பற்றி அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிடி தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது மட்டும்2007ல் போடப்பட்ட அரசு உத்தரவு161ஐ காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுப்பதாக தமிழாசிரியர்கள் கூறுகின்றனர்.

161அரசு உத்தரப்படி பி.எட் அல்லது பி.லிட் முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் அல்லது நேரடியாக தமிழாசிரியர் பணி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. இதனால் உயர்நிலைப் பள்ளிகளில்1200தமிழாசிரியர் பணியிடங்களும்,மேனிலைப் பள்ளிகளில்600தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. 

இந்த பிரச்னை குறித்து தமிழாசிரியர்கள் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லாமல் போனதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பதவி உயர்வு மற்றும் நேரடி பணி நியமனம் என (தமிழாசிரியர்கள் உள்பட)13450ஆசிரியர் பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ளன. 

குறிப்பாக மொழிப்பாடத்தில் தமிழாசிரியர்கள் இல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முழுமையாக கிடைக்காத சூழ்நிலை மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்),தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு,மதிப்பெண் கிடையாது'என,ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக,50சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு,அனுபவத்திற்கான மதிப்பெண்,முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் பாதிப்பு: அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில்,1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்காக,சென்னையில்,மூன்று மையங்களில்,சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. 

இதில்,15 ஆயிரம் பேருக்கு,இரு கட்டங்களாக,சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான,34 மதிப்பெண்களில்,ஆசிரியர் பணி அனுபவத்திற்கு மட்டும்,15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழரை ஆண்டு பணி புரிந்திருந்தால்,முழுமையான மதிப்பெண் கிடைக்கும். 

அதன்படி,விண்ணப்பித்துள்ளவர்களில்,ஏராளமானோர்,10 ஆண்டுகளுக்கும் மேலாக,அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்கள்,சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் பரிந்துரையுடன்,கல்லூரி கல்வி இயக்குனரிடம் இருந்து,அனுபவ சான்றிதழை பெற்றுள்ளனர். இந்நிலையில், 'ஸ்லெட்' மற்றும்,  'நெட்' தகுதியை பெற்றதற்குப் பின் உள்ள அனுபவம் மட்டுமே,கணக்கில் கொள்ளப்பட்டு,மதிப்பெண் வழங்கப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

'ஸ்லெட்'மற்றும்'நெட்'தகுதிக்கு முந்தைய அனுபவம் கணக்கில் வராது. இதனால்,50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு,கடும் பாதிப்பு ஏற்படும் என,கூறப்படுகிறது. டி.ஆர்.பி.,யின் புதிய நிபந்தனை குறித்த அறிவிப்பு,நேற்று,சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் தெரிவிக்கப்பட்டது.   
இதைக் கேட்டதும்,விண்ணப்பதாரர்கள்,அதிர்ச்சி அடைந்தனர். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில்,விண்ணப்பதாரர்கள்,திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது குறித்து,காமராஜர் பல்கலையின் உறுப்பு கல்லூரி (சாத்தூர்) ஆசிரியர்,பெருமாள் கூறியதாவது: கடந்த,2006,09ல்,உதவி பேராசிரியர் தேர்வு நடந்தது. அதில், 'நெட்- ஸ்லெட்'தகுதிக்கு முந்தைய பணி அனுபவமும்,கணக்கில் கொள்ளப்பட்டு,மதிப்பெண வழங்கப்பட்டது. ஆனால்,இப்போது, 'நெட் - ஸ்லெட்'தகுதிக்கு பிந்தைய அனுபவம் மட்டுமே,கணக்கில் கொள்ளப்படும் என,கூறுகின்றனர். 

பதிலளிக்க வேண்டும்: நான்கு முறை,அறிவிப்பை (நோட்டிபிகேஷன்) வெளியிட்டு,டி.ஆர்.பி.,குழப்புகிறது. டி.ஆர்.பி.,யின் இந்த அறிவிப்பால்,மொத்த விண்ணப்பதாரர்களில்,50 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு,பாதிப்பு ஏற்படும்.'நெட் - ஸ்லெட்'தகுதியை பெற்றபின் தான்,ஆசிரியர் பணியாற்ற தகுதி எனில்,இத்தனை ஆண்டுகளாக,கல்லூரிகளில் பணியாற்ற,அனுமதித்தது ஏன்?

கடந்த காலங்களில்,ஒட்டுமொத்த அனுபவத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட டி.ஆர்.பி.,இப்போது மறுப்பது ஏன்?இதற்கெல்லாம்,டி.ஆர்.பி.,பதிலளிக்க வேண்டும். இவ்வாறு,பெருமாள் கூறினார். புகார் குறித்து,டி.ஆர்.பி.,உறுப்பினர் - செயலர்,வசுந்தரா தேவியிடம் விளக்கம் பெற முயன்றும்,அவர், 'பிசி'யாக இருப்பதாகவும்,இப்போது, 'பேச முடியாது'என்றும்,ஊழியர்கள் தெரிவித்தனர்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டுபிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின்181உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டுமூக நீதிக்கு எதிரான அரசாணை252ஐ திரும்ப பெற வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்

  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு ...