9 September 2022

 குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. 


இந்நிலையில் இந்த தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குரூப்-1 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ந் தேதிக்கு பதில் நவம்பர் 19ந் தேதி தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.


நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு தேதி் மாற்றப்பட்டுள்ளது.

 பள்ளி தலைமையாரியர்கள் கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும் - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!




புதுச்சேரி மாநில பள்ளி கல்வித் துறை, 'தலைமை பொறுப்பில் இருந்தாலும் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது.


அம்மாநிலத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ் 712 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், இந்தப் பள்ளிகளில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


அந்தந்த பள்ளிகளின் நிர்வாக பொறுப்புகளை, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமையாசிரியர், துணை தலைமையாசிரியர், ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள், கவனித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளியில் தலைமை பொறுப்பினை கவனித்து வந்தாலும், அவ்வப்போது மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுக்க வேண்டும்.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை, கடந்த 2000ம் மற்றும் 2011ம் ஆண்டில் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. ஆனால், தலைமை பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்ட நேரத்தில் கூட, வகுப்பிற்கு சென்று பாடங்களை நடத்தவில்லை.


எங்களுக்கு நிர்வாக பணி மட்டும் தான். எங்களால் வகுப்பிற்கு சென்று பாடம் நடத்த முடியாது என்று மறுத்து விடுகின்றனர்.இந்த செய்தி மற்ற ஆசிரியர்களுக்கிடையில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, மற்ற ஆசிரியர்கள் நேரடியாக பள்ளி கல்வித் துறையிடம் 'பள்ளிக்கல்வி விதிமுறைப்படி, பள்ளி முதல்வர்கள், தலைமையாசியர்கள் பாடம் நடத்த வேண்டும். ஆனால் இவர்கள் நிர்வாகப் பணியை மட்டும் பார்க்கின்றனர்; மாணவர்களுக்கு பாடம் நடத்த மறுக்கின்றனர்' என புகார் பட்டியல் கொடுக்க ஆரம்பித்தனர்.


இப்பிரச்னை மாநிலத்தின் நான்கு திசைகளில் இருந்தும் எதிரொலித்தது. இதனையடுத்து, பள்ளிக் கல்வித் துறை தற்போது பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, "தலைமை பொறுப்பில் இருந்தாலும் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு கட்டாயம் பாடங்கள் நடத்த வேண்டும்" என மீண்டும் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மேலும், பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு பிறப்பித்துள்ள உத்தரவில்,


நிர்வாகப் பணிகளை காரணம் காட்டி பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில்லை என பள்ளிக்கல்விதுறை கவனத்திற்கு வந்துள்ளது. பள்ளி கல்வித் துறை விதிகளின்படி, பள்ளி முதல்வர்கள் வாரத்திற்கு ஆறு வகுப்புகளும், துணை முதல்வர்கள் வாரத்திற்கு 12 வகுப்புகளும் கட்டாயம் நடத்த வேண்டும்.


கிரேடு-1 தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 6 வகுப்புகளும், கிரேடு-2 தலைமையாசிரியர்கள், ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 10 வகுப்புகளை மாணவர்களுக்கு கட்டாயம் எடுக்க வேண்டும். இதனை பள்ளி வார அட்டவணையிலும் இடம் பெறச் செய்து, பாடங்களை நடத்த வேண்டும். இதனை பின்பற்றுவது குறித்து தீவிரமாக கண் காணிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.


பள்ளி கல்வித் துறை வழக்கமாக சுற்றறிக்கை அனுப்பிய கையோடு அமைதியாகிவிடும். ஆனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு பள்ளிகளில் பின்பற்றப்படுகிறா? என்பதை ரகசியமாக விசாரிக்கவும், "திடீர் விசிட்" நடத்தி ஆய்வு செய்யவும் பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


 `நீட் தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்ன?!' - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன விளக்கம்



சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதியில் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்னைகளை, மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவாக வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பிரச்னைகளை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கினார்.


அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``இலவசத் திட்டங்கள் என்பவை சமூகநீதிக்குத் தொடர்புடையவை. சமூகநீதி அடிப்படையில், அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கவே இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இரண்டு ஆண்டுகள் இந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது. இன்றைக்கு அதைத் தாண்டி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படித்துவருகின்றனர். மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தைத் தற்போதுதான் உடைத்திருக்கிறோம். மாணவர்கள் தற்போதுதான் பள்ளிச் சூழலுக்கு மீண்டும் தயாராகிவருகிறார்கள். ஆகவே, நீட் தேர்ச்சி சதவிகிதம் குறித்து இந்தக் காரணத்தையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.


நீட் தேர்வே கூடாது என்பதற்காக நாம் சட்டப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தாலும், அது வரைக்கும் நம்முடைய குழந்தைகளுக்கு அதற்கான பயிற்சியைக் கொடுக்கவேண்டியது பள்ளிக்கல்வித்துறையின் கடமை. மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். 


அதேநேரத்தில் தன்னம்பிக்கையை மாணவர்கள் இழந்துவிடக் கூடாது. மாணவர்கள் தவறாக முடிவெடுப்பது சம்பந்தமான செய்திகளைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. நீட் தேர்வு ரிசல்ட் வெளியான அன்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதைப்போல இருந்தேன். குழந்தைகளுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையைக் கொடுத்தாலும், ஏதாவது ஒரு தவறான முடிவை எடுத்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது. தயவுசெய்து மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது போன்ற செயலைச் செய்யக் கூடாது. அது பெற்றோரையும் சமூகத்தில் தேவையில்லாத கவலையில் ஆழ்த்திவிடும்.


நீட் தேர்வு விலக்கு குறித்து சட்டமன்றத்தில் கட்சி வேறுபாட்டைக் கடந்து தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். சமீபத்தில் கேரளாவுக்கு வந்திருந்த அமித் ஷாவிடம்கூட நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்தியிருக்கிறோம்.


 நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்துப் பேசிவருகின்றனர். நல்ல தீர்வு வருமென்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பள்ளி வளாகத்தைச் சுற்றி போதைப்பொருள்கள் கிடைக்காமல் இருக்க தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். அப்படி யாரேனும் போதைப்பொருள்களை விற்றால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 தற்காலிக ஆசிரியர் சிக்கலுக்கு விரைவில் வருகிறது தீர்வு





தற்காலிக ஆசிரியர்களை வைத்து, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் நீடித்து வந்த சிக்கலுக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் வகையில், காலிப்பணியிடங்கள் திரட்டும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.கொரோனா தொற்று பரவலுக்கு பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.




இம்மாத இறுதி வரை, சேர்க்கை நீட்டித்துள்ள நிலையில், பல பள்ளிகளில் புதிய சேர்க்கை நடத்த முடியாத அளவுக்கு, மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு நீடித்து வந்தது.


 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, டெட் முடித்தோரை சமீபத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தனர். இதேபோல், மேல்நிலை வகுப்புகளுக்கும், தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு, கற்பித்தல் பணி தொடர்வதால், தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் ஏற்படும் என, தலைமையாசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். 


ஏனெனில், அவர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்குவதால், பள்ளி நேரத்தை தாண்டி, சிறப்பு வகுப்புகள் கையாள்வதில்லை. அதனால், கல்வியில் பின்தங்கியோரின் கற்றல் நிலையை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. 


இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களின் விபரங்கள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...