Posts

Showing posts from April 30, 2013
ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு த்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக் கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதிஅளித்துள்ளார். இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள் கவலை கொள்கின்றனர்.
பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்   ஆசிரியர் தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.  இதுதொடர்பாக அவர் மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பி.எட்., எம்.எட். பட்டதாரிகளின் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து, சென்னையில் ஏப்ரல் 17-ஆம் தேதி கருத்துப்பட்டறை நடத்தப்பட்டது.  இதையொட்டி, எனது தலைமையில் நடைபெற்றகருத்தரங்கில், தென் மாநிலங்களில் இருந்து சிறந்த கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்று, பாடத் திட்டங்களில் கொண்டுவர வேண்டிய கருத்துகளைத் தெரிவித்து, விவாதங்கள் நடைபெற்றன.  இதனடிப்படையில், இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப ஆச