24 January 2015

போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்.தேர்வு முறையிலும் மாற்றம்

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள்முன்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில், சிறப்பாசிரியர்களை இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான அரசாணை கடந்த 17.11.2014 அன்று வெளியானது.அதன்படி, 95 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5மதிப்பெண்ணுக்கு புதிய முறை கடைப்பிடிக்கப்படும். அதாவது, கூடுதல் கல்வித்தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளிகளில் பணியாற்றிய அனு பவம் இருப்பின் அதற்கு 1 மதிப் பெண், தனியார் பள்ளி அனுபவம் என்றால் அரை மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (பைன் ஆர்ட்ஸ்) சாதனை போன்ற இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்காணலுக்கு ஒன்றரை மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண் வழங்கப்படும்.

1,000 காலியிடங்கள் புதிய தேர்வுமுறையில் 530 உடற்கல்வி ஆசிரியர், 250 ஓவிய ஆசிரியர், 160 தையல் ஆசிரியர், 55 இசை ஆசிரியர் என ஏறத்தாழ 1000 சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்தது.இந்த நிலையில், எழுத்துத் தேர்வு நீங்கலான எஞ்சிய 5 மதிப்பெண்ணில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியுள்ளதால் அதனால் நடைமுறை சிக்கல் ஏற்படக்கூடும் என்றும், ஆயிரக்கணக்கானோர் சிறப்பு ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக காத்திருப்பதால் பதிவுமூப்புக்கும் (சீனியாரிட்டி) குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாம் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

புதிய தேர்வுமுறையிலும் மாற்றம் இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவுசெய்துள்ளது. அரை மதிப்பெண் வழங்கும் முறையைகைவிட்டுவிட்டு, எளிதாக கணக்கிடும் வண்ணம் முழு எண்ணில் மதிப்பெண் வழங்கவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு பதிவு செய்த வருடத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாமா? என்பது குறித்தும் அரசு திட்டமிட்டு வருவதாக ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாத உதவி பேராசிரியர் நியமனம்.அரைகுறையாக நிற்கும் தேர்வு பட்டியல்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய தமிழக முதல்வர் அறிவித்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனம் இன்னும் முடிவடையவில்லை. பணிக்கான தேர்வு பட்டியல் அரைகுறையாக நிற்கிறது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று 2011-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை 13.9.2011 அன்று வெளியானது. இதைத் தொடர்ந்து, 1,093 உதவி பேராசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.5.2013 அன்று வெளியிட்டது.

உயர்கல்வித் தகுதி (பிஎச்.டி.), பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டது.உயர்கல்வித் தகுதி, பணி அனுபவத்துக்கான மதிப்பெண்படி “ஒரு காலியிடத்துக்கு5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு ஏறத் தாழ 6 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். சென்ற டிசம்பர் மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.இதையடுத்து, ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவர வியல், விலங்கியல் உட்பட குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டும் தேர்வு பட்டியல் வெளி யிடப்பட்டது.பொருளாதாரம், புவியியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங் களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி மதிப்பெண் விவரம் டிசம்பர் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இன்னும் தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. எனவே, தேர்வு பட்டியலே அரைகுறையாகநிற்கிறது.முதல்வர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உதவி பேராசிரியர் நியமனம்முடிவடையாததால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போதைய நியமனம் 2012-13-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்கு உரியதாகும். இதற்கிடையே,2013-14, 2014-15 கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்கள் வந்துவிட்டன.2012-13-ம் ஆண்டுக்கான நியமனமே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த ஆண்டுக்கான காலியிடங்கள் எப்போது நிரப்பப்படுமோ? என்று பிஎச்.டி. பட்டதாரிகளும், ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை மற்றும் எம்.ஃபில். பட்டதாரிகளும் கவலைப்படுகிறார்கள்.

பள்ளி ஆசிரியர் நியமனம் போன்று கல்லூரி உதவி பேராசிரியர்களையும் முன்பு போல போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய்ய வேண்டும் என்பது அவர்களின் தலையாக கோரிக்கை.தற்போதைய நியமனம் 2012-13-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்கு உரியதாகும். இந்த ஆண்டுக்கான நியமனமே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான காலியிடங்கள் எப்போது நிரப்பப்படுமோ?

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...