Posts

Showing posts from July 4, 2017
Image
'TET - 2017' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி - தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்         ஆசிரியர்   பணிக்கான  ' டெட் '  தகுதி   தேர்வு   எழுதிய  7.53  லட்சம்   பேரில் , 4.64  சதவீதம்   பேர்   தேர்ச்சி   பெற்றுள்ளனர் .  கணிதம் ,  அறிவியல்   பாடப்பிரிவில் தேர்ச்சி   குறைந்துள்ளது . தமிழக   அரசு   பள்ளிகளில்   காலியாக   உள்ள   ஆசிரியர்   பணியிடங்களில்   புதிய ஆசிரியர்களை   நியமிப்பதற்கான  ' டெட் '  தகுதி   தேர்வு   ஏப்ரல்  29,30 ல்   நடந்தது . இதில்   இடைநிலை   மற்றும்   பட்டதாரி   ஆசிரியர்   பணியிடங்களுக்கு   தனித்தனியாக தேர்வு   நடந்தது .  முதல்   தாளில்  2.41  லட்சம்   பேரும் ;  இரண்டாம்   தாளில்  5.12 லட்சம்   பேரும்   பங்கேற்றனர் .  அவர்களில்  4.64  சதவீதமான  34  ஆயிரத்து , 979 பேர்   தேர்ச்சி   பெற்றுள்ளனர் . அதாவது   முதல்   தாள்   எழுதியவர்களில்  6.71  சதவீதத்தினரும் ;  இரண்டாம்   தாள் எழுதியவர்களில்  3.66  சதவீதத்தினரும்   மட்டுமே   தேர்ச்சி பெற்றுள்ளனர் . குறிப்பிட்ட   பாடங்களில்   தேர்வு   எழுதியோரில்   கணிதம்   மற்றும் அறிவியல்   பாடத
'குரூப் - 4' பதவிக்கு 17ல் கவுன்சிலிங் 'குரூப் - 4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 17ல் துவங்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், காலியிடங்களை நிரப்ப, 2016 நவ., 6ல் எழுத்து தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான, முதல் கட்ட கவுன்சிலிங், ஜூலை, 17 முதல் நடக்கும். இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் பதவிகளுக்கு, ஜூலை, 17 முதல், ஆக., 8 வரையும், தட்டச்சர் பதவி களுக்கு, ஆகஸ்ட், 16 முதல், 30 வரையிலும், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, செப்., 4 முதல், 6 வரையிலும் கவுன்சிலிங் நடக்கும். கூடுதல் விபரங்களை,  www.tnpsc.gov.in/results.html  என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான எழுத்து தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்தனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல், நுண்உயிரியல், மனைஅறிவியல், தெலுங்கு, உடற்பயிற்சி இயக்குனர்கள் (கிரேடு-1) ஆகிய 17 பாடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்கள் கைக்கெடிகாரம் கட்டிச்செல்ல அனுமதிக்கவில்லை. செல்போன் உள்ளிட்ட சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. பைகள் வைக்க தனியாக அறை ஒதுக்கப்பட்டது. தேர்வு நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாடியில் தேர்வு எழுதிவிட்டு கீழே வந்தனர். அவர்கள் வெளியே செல்லாத வகையில் கேட்டை இழுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பூட்டினர். தங்களை அடைத்து வைத்ததால் இது குறித்து தேர்