15 March 2017

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியீடு...


ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் ஓரிரு நாட்களில் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இம்மாதம் 31ம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கி சர்வர் பிரச்னை: TET,தேர்வர்கள் அவதி

காரைக்குடி:வங்கிகளில் சர்வர் பழுதால் டி.இ.டி., தேர்வு கட்டணம் செலுத்துபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.ஆசிரியர் தகுதி தேர்வு மூன்று ஆண்டுக்கு பிறகு வருகிற ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 12 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 23-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். சிவகங்கை மருதுபாண்டியன் மேல்நிலை பள்ளி, தேவகோட்டை ஆறாவது வார்டு நகராட்சி மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேர்வு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான செலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படுகிறது. இந்த செலானில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., கனரா வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் ஐ.ஓ.பி., வங்கியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் பழுது என்ற காரணத்தை கூறி, தேர்வு கட்டணத்தை வாங்க மறுப்பதால் தேர்வர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

காரைக்குடி வைரவபுரத்தை சேர்ந்த எம்.ராஜதுரை கூறும்போது: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்துக்குரிய செலானும் இணைத்தே வழங்கப்படுகிறது. இந்த செலானில் ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ள மூன்று வங்களில் ஒன்றை நாம் தேர்வு செய்து அதை செலானிலும், விண்ணப்பத்திலும் பூர்த்தி செய்ய வேண்டும்.

அவ்வாறு பூர்த்தி செய்து வங்கிக்கு செல்லும்போது, சர்வர் பழுதால் பணம் வாங்க மறுக்கின்றனர். வேறு வங்கியில் பணம் செலுத்த கூறுகின்றனர். இதனால், செலானில் பூர்த்தி செய்த வங்கி விபரத்தையும், விண்ணப்பத்தில் குறிப்பிட்டதையும் ஒயிட்னர்
மூலம் அழித்து மாற்ற வேண்டி உள்ளது. விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது, எந்த வித அடித்தல் திருத்தல் இருக்க கூடாது, என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் என்பதால் மாற்று விண்ணப்பம் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ள வங்கிகள் தேர்வு கட்டணத்தை பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, வங்கிகள் இவ்வாறு பணத்தை வாங்க மறுத்தால், தேர்வர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும், என்றார்.

'TET' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன.

 மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்., 29, 30ல், இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. அதற்கான விண்ணப்ப வினியோகம், 6ல் துவங்கியது. வரும், 22 வரை விண்ணப்பம் பெறலாம்; 23க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். 

இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிக்கையில், 2011 நவ., 15ம் தேதியிட்ட அரசாணைப்படி, டெட் தேர்வு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், '2010 ஆக., 23க்கு பின், அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்' என, எச்சரித்துள்ளார்.அதனால், ஆசிரியர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ''டெட் தேர்வே, 2011க்கு பின் தான், தமிழகத்தில் நடத்தப்படுகிறது. 2010 முதல், பணியில் சேர்ந்தவர்கள், எப்படி தேர்வு எழுத முடியும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை தெளிவான விளக்கம் தர வேண்டும்,'' என்றார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...