Posts

Showing posts from August 12, 2022
Image
  TNTET paper 1 - Pratice Test Portal Open On TRB Website ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ள நிலையில் அதற்காக பயிற்சி பெறும் பகுதியானது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப உள்நுழைவு ( user Login) மூலமாக சென்று தேர்வுக்கான பயிற்சியினை பெறலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Image
  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை! 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை. மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினாலும், அதனை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து, தமிழகத்திற்கென தனி கல்வி கொள்கையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தனி கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வருகிறது. அந்தவகையில், இன்று அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வளாகத்தில் மாநில கல்விக்கொள்கை உருவாக்க கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை செய்து வருகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 11-ஆம் பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறினார். இந்த கூட்டத்தில் பேசிய
Image
 " டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அதிகபட்ச வயதை 40ஆக உயர்த்த வேண்டும்" - ராமதாஸ் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பை 40ஆக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் தொகுதி பணிகளுக்கு தகுதியான பலர் தேர்வில் பங்கேற்கத் துடிக்கும் போது, வயதைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமற்றதாகும். தமிழக அரசுத் துறைகளுக்கு துணை ஆட்சியர் 18 பேர், காவல் துணை கண்காணிப்பாளர் 26 பேர், வணிகவரித்துறை உதவி ஆணையர் 25 பேர், கூட்டுறவு துணைப் பதிவாளர் 13 பேர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் 7 பேர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி மூவர் என மொத்தம் 6 வகையான பணிகளுக்கு 92 பேர் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கி விட்ட நிலையில், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு இந்த முறையும் 34 ஆகவே நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. முதல் தொகுதி தேர்வுகளை எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்ட