Posts

Showing posts from April 8, 2022
Image
 11.04.2022 அன்று பள்ளிக் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயார்நிலையில் இருக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
Image
  10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!! 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயாராக இருக்கும் தனித்தேர்வர்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  பிளஸ்1 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படாததால் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்   வரும் கல்வியாண்டிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டு பிளஸ்1 மதிப்பெண் விபரம் கேட்பதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் பயில நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் வேறு வழியின்றி மாணவர்கள் இதில் விண்ணப்பித்து தேர்வை சந்தித்து வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 99 ஆயிரத்து 610 பேர் நீட் தேர்வை எழுதினர். அகில இந்திய அளவில் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். கொரோனா காரணமாக நடப்பு ஆண்டிற்கான மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடக்கம் தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் கல்வியாண்டில் மருத்துவக்கல்வி பயில நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 2ம
  மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை வழங்கப்படும்.:சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, மக்கள் நலப் பணியாளர் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக 1989-ல் 25,354 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் 1991-ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1997 பிப்ரவரியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது. அதனையடுத்து பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2001 ஜூன் மாதம் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் வேலையை விட்டு நீக்கியது என்று அவர் கூறினார். அதனையடுத்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2006- ஜூனில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் கலைஞர் கருணாநிதி வேலை அளித்தார். ஊராட்சிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 12,618 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக ம
Image
  இன்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியாகிறது!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் டி.என்.பி.எஸ். சி ., யின் தேர்வு முறை மாற்றங்கள் குறித்து , முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. அரசு துறை அலுவலர் மற்றும் ஊழியர்கள், டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வாணையத்தின் பணி நியமன நடவடிக்கைகள், அரசின் கொள்கை முடிவுகளின்படி, அவ்வப்போது மாற்றப்படும். அதன்படி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறை மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்க, இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மேலும், பிற மதங்களில் இருந்து மாறுவோருக்கு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு, இட ஒதுக்கீடு உண்டா என்பது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஆணைய தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், தேர்வாணைய உறுப்பினர்கள் ஆறு பேர், டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
  கருணாநிதி வாக்குறுதியை நிறைவேற்றுவாரா ஸ்டாலின் : கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்ப்பு யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2010ல் முதல்வராக இருந்த கருணாநிதி அளித்த எழுத்துப்பூர்வ வாக்குறுதியை, தற்போது முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்' என கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.'அரசு கலை கல்லுாரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் பி.எச்டி., நெட்/செட் என யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு மூலம் நியமிக்கப்படுவர்' என 2010 மார்ச் 22ல் கருணாநிதி உத்தரவில் அப்போதைய உயர்கல்வி செயலாளர் கணேசன் எழுத்துப்பூர்வ உறுதியளித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கிடப்பில் போடப்பட்டது.இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 'பணி அனுபவம் அடிப்படையில் தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்' என அறிவிக்கப்பட்டு 1146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியராக தேர்வு செய்ய உத்தரவும் பிறப்பித்தது. 2021 பிப்.,15 மற்றும் 18ல் அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியத
Image
  தமிழகம் முழுவதும் 26.76 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர் 26.76 லட்சம் மாணவர்கள். தமிழகம் முழுவதும் நடப்பாண்டு 26,76,675 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவுள்ளதாக தமிழக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், 2021 – 2022ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை தற்போது தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,86,887 பேர், மாணவிகள் 4,68,586 பேர் என மொத்தம் 9,55,474 பேர் எழுதுகின்றனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,33,684 பேர், மாணவிகள் 4,50,198 பேர் என மொத்தம் 8,83,884 பேர் எழுதுகின்றனர். அதேபோல், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3,98,321 பேர், மாணவிகள் 4,38,996 பேர் என மொத்தம் 8,37,317 பேர் தேர்வு எழுதவுள்ளனர். மூன்று வகுப்புகளையும் சேர்ந்து மாணவர்கள் 13,18,892 பேர், மாணவிகள் 13,
Image
  பொதுத்தேர்வு பணிக்கு இவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்..! வெளியான பரபரப்பு உத்தரவு..! பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது என்று தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கு புதிய வழிகாட்டுதல்களை தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், வினாத்தாள் மையங்களில் காவலர் பணியில் இருக்க வேண்டும் என்றும், இரட்டை பூட்டுக் கொண்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் விதிகளுக்கு புறம்பாக தேர்வுப்பணியில் அலுவலர்களை நியமிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது. தேர்வறை கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், அன்றைய பாடத்துக்கான ஆசிரியராக இருக்கக் கூடாது. அரசுப்பள்ளி ஆசிரியர்களையே தேர்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் அரசு உ