Posts

Showing posts from January 18, 2024
Image
  அரசு உத்தரவால் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் (அரசாணை எண்:243ல்) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் கட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த ஆசிரியர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தொடக்ககல்வியில் உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் தொடக்க கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றால் தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசு உத்தரவு தொடக்க கல்வியை முடக்கும் வகையில் உள்ளது. அதாவது கல்வி ஒன்றியம் மாவட்டத்திற்குள் நடந்து பதவி உயர்வு இனிமேல் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடக்கும் என்பதும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருந்த பதவி உயர்வில் கை வைத்தும் அந்த உத்தரவு வெளியாகியதால் மாநில அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:தி.மு.க. அரசு மீண்டும் வந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம்
Image
  TNPSC Group 4: குரூப் 4 தேர்வு கல்வித் தகுதி; தமிழக அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த குரூப் 4 தேர்வுக்கு கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் அதிகபட்ச கல்வித் தகுதி எதுவுமில்லை. அதாவது 10 வகுப்பு தேர்ச்சி முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரை யார் வேண்டுமானாலும் குரூப் 4 தேர்வை எழுதலாம். இந்தநிலையில், திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 10 ஆம் வகுப்பு தோல்வி மற்றும் தமிழில் எழுத படிக்க தெர
Image
  தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு 100% வேலை உரிமைச் சட்டம்! வேல்முருகன் விடுக்கும் டிமாண்ட்! தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு 100% வேலை வழங்கும் வகையில் தமிழர் வேலை உரிமைச் சட்டத்தை இயற்றுமாறு வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ''தமிழநாட்டின் வேலை- தமிழர்களின் உரிமை'' என்கிற முழக்கத்தை வென்றுகாட்டி , வடவர்களின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த, உள் நுழைவு அனுமதிச்சீட்டு- முறை கொண்டுவர வலியுறுத்தி, என்.எல்.சி, கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக -அரசு வேலை கோரி ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. எந்த நோக்கத்திற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டதோ, அந்த பயணத்தின் முதற்கட்ட வெற்றியை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், மீட்டெடுக்க வேண்டிய தளங்களும் உரிமைகளும் ஏராளம் உள்ளன. உலகில் முன் தோன்றிய மூத்த குடி, வளமார்ந்த முதன் மொழிக்குச் சொந்த இனம், நீண்ட வரலாற்றையும், வளமார்ந்த பண்பாட்டையும் கொண்டு செம்மாந்து வாழ்ந்
Image
JEE Main 2024; ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? கடைசி வாரத்தில் செய்ய வேண்டியது இதுதான்! அடுத்த வாரம் ஜனவரி 24 முதல் ஜேஇஇ முதன்மை தேர்வின் முதல் அமர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கு முந்தைய கடைசி வாரங்களில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள் இங்கே: ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான கடைசி சில நாட்களை, சுருக்கமாக திருப்புதல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கணக்கீடுகளைத் தீர்ப்பது, தயாரிப்பில் உள்ள பலவீனமான பகுதிகளை அறிந்து அதில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், பின்வரும் முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ளவேண்டும்: - படிக்கும் போது கவனம் செலுத்தி நேர்மறையான அணுகுமுறையைப் பேணுங்கள். - நேர நிர்வாகத்துடன் JEE தர கணக்கீடுகளின் வினாடி வினாக்கள்/ மாதிரித் தேர்வுகளைத் தீர்ப்பதன் மூலம் வேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். - வேகம் மற்றும் துல்லியம் உங்கள் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கும். — வெற்றிகரமான தேர்வு மனோபாவத்தை உருவாக்க CBT (கணினி அடிப்படையிலான தேர்வு) முறையில் மாதிரி தேர்வுத் தொடரை விரும்புவது நல்லது. உங்கள் அட்டவணையின்படி குறிப்பிட்ட நேரத்தில் மாதிரித் தேர்வுகளை முயற்ச