PG Tamil medium 2011-12 provisional selection list released by TRB
3 February 2014
ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றது டிஆர்பி?
ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல்வர் ஜெயலலிதா இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவித்தார்.
கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,
'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில்
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார். 2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
இத்தகவலால் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கான தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் முதல்வரின் அறிவிப்பிற்கேற்ப அரசாணை வெளியிடப்பட்டவுடன் தொடர்பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை :2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை :2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை :2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் ஜெயலலிதா
பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர்ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "மாணவ, மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை,19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப புதிய தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.300-க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 1,125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவ மாணவிகள் அதே ஆண்டிலேயே உயர் கல்வியை தொடர ஏதுவாக, தேர்ச்சி பெறாத பாடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து பாடங்களையும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உடனடித்தேர்வு எழுத அனுமதித்தல், புகைப்படம், இருபரிமாணப் பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய குறியீடு ஆகியவற்றுடன் கூடிய பொதுத் தேர்வுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் என பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டு உள்ளன.
பள்ளிக் கல்வியில் இவ்வாறு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை,2013–2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம்,
2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாகஇருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்" என்று முதலவர் ஜெயலலிதா தெரிவித்தார்.
பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர்ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "மாணவ, மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை,19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப புதிய தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.300-க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 1,125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவ மாணவிகள் அதே ஆண்டிலேயே உயர் கல்வியை தொடர ஏதுவாக, தேர்ச்சி பெறாத பாடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து பாடங்களையும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உடனடித்தேர்வு எழுத அனுமதித்தல், புகைப்படம், இருபரிமாணப் பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய குறியீடு ஆகியவற்றுடன் கூடிய பொதுத் தேர்வுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் என பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டு உள்ளன.
பள்ளிக் கல்வியில் இவ்வாறு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை,2013–2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம்,
2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாகஇருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்" என்று முதலவர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை : முதல்வர்
ஜெயலலிதா இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை : முதல்வர் ஜெயலலிதா
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
ஜெயலலிதா இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை : முதல்வர் ஜெயலலிதா
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.
நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்-கணினி பட்டதாரி ஆசிரியர்கள்
நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நிறைவேற்றினர்.
கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை கூட்டத்தில், வேலூர், கடலூர் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகள், 500 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.ICT கணினி கல்வி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது. திட்டம் முறையாக அறிவிக்கப்படும் சூழலில், ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது. சென்னையில் டி.ஆர்.பி., வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது.
2.ஆறு முதல் பத்த வரையிலான வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கணினி பாடதிட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
3. கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு நேர ஆசிரியர்களாக பணியாற்றும் பகுதி நேர கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
4. கடந்த ஆண்டு அறிவித்த, ஸ்மார்ட் கிளாஸ்' கல்வி முறையை நடைமுறை படுத்தி, கணினி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
5.நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம், அவர்களின் பயோடேட்டா பெறப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு தகவல் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
மேலும், கூட்டமைப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டாவை, pandiyanve@gmail.comஎன்ற இ–மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்து, இணைந்து கொள்ளலாம். குறிப்பு: கட்டணம் ஏதும் கிடையாது.
நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நிறைவேற்றினர்.
கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கலந்தாலோசனை கூட்டத்தில், வேலூர், கடலூர் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகள், 500 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.ICT கணினி கல்வி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பது. திட்டம் முறையாக அறிவிக்கப்படும் சூழலில், ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது. சென்னையில் டி.ஆர்.பி., வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது.
2.ஆறு முதல் பத்த வரையிலான வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கணினி பாடதிட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
3. கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு நேர ஆசிரியர்களாக பணியாற்றும் பகுதி நேர கணினி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
4. கடந்த ஆண்டு அறிவித்த, ஸ்மார்ட் கிளாஸ்' கல்வி முறையை நடைமுறை படுத்தி, கணினி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
5.நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம், அவர்களின் பயோடேட்டா பெறப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு தகவல் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
மேலும், கூட்டமைப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பயோடேட்டாவை, pandiyanve@gmail.comஎன்ற இ–மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்து, இணைந்து கொள்ளலாம். குறிப்பு: கட்டணம் ஏதும் கிடையாது.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி. மாநிலம் முழுதும் டிட்டோ ஜாக் பேரணி, ஆர்ப்பாட்டம்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
#ஆசிரியருக்கான தகுதித் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்
#இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்
# தமிழ், வரலாற்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
#தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும் நிர்ணயிக்க வேண்டும்.
#புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
# தொடக்கக் கல்வித்துறையில் தமிழ் வழிக் கல்வி முறையை தொடர்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில்மாநிலம் முழுதும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை டிட்டோ-ஜாக் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் அம்பை ஆ.கணேசன் தொடங்கி வைத்து கோரிக்கை குறித்து பேசினார். இப்பேரணி தெற்கு பிரதான சாலை வழியாக ஜவாஹர் திடலை வந்தடைந்தது.
இதையடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கா.மைக்கேல்ஜார்ஜ்கமலேஷ் தலைமை வகித்தார். அமைப்பின் செயலர் செ. சாம்மாணிக்கராஜ், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணி மாவட்டச் செயலர்கள் இ. திருஞானசம்பந்தம், இ.சுடலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் சங்க மாநில துணைத் தலைவர் ஏ. ஜேம்ஸ்பொன்னையா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் மி. வின்சென்ட், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டத் தலைவர் வெ. அய்யனார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பி. ரெங்கநாதன்,ஆசிரியர் மன்ற மாவட்டப் பொருளாளர் எஸ். ஷேக்முகம்மதுரபீக், ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் செ. ரமேஷ், வி. தங்கமணி ஆகியோர்கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
#ஆசிரியருக்கான தகுதித் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்
#இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்
# தமிழ், வரலாற்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
#தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும் நிர்ணயிக்க வேண்டும்.
#புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
# தொடக்கக் கல்வித்துறையில் தமிழ் வழிக் கல்வி முறையை தொடர்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில்மாநிலம் முழுதும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை டிட்டோ-ஜாக் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் அம்பை ஆ.கணேசன் தொடங்கி வைத்து கோரிக்கை குறித்து பேசினார். இப்பேரணி தெற்கு பிரதான சாலை வழியாக ஜவாஹர் திடலை வந்தடைந்தது.
இதையடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கா.மைக்கேல்ஜார்ஜ்கமலேஷ் தலைமை வகித்தார். அமைப்பின் செயலர் செ. சாம்மாணிக்கராஜ், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணி மாவட்டச் செயலர்கள் இ. திருஞானசம்பந்தம், இ.சுடலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் சங்க மாநில துணைத் தலைவர் ஏ. ஜேம்ஸ்பொன்னையா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் மி. வின்சென்ட், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டத் தலைவர் வெ. அய்யனார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பி. ரெங்கநாதன்,ஆசிரியர் மன்ற மாவட்டப் பொருளாளர் எஸ். ஷேக்முகம்மதுரபீக், ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் செ. ரமேஷ், வி. தங்கமணி ஆகியோர்கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும்-ஆசிரியர் கூட்டணி
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து, புறக்கணிக்கப்படுவதால், வரும், லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின்அதிருப்தி எதிரொலிக்கும்,'' என, ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர்,செந்தில்குமார் கூறினார்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்,கூட்டு நடவடிக்கைக் குழுவின், நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டியில், நேற்று,கோரிக்கைப் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், :தமிழகத்தில், 1.75 லட்சம்,தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான, ஊதியம் வழங்கவேண்டும் என்ற, எங்களின் கோரிக்கையை, ஆட்சிக்கு வரும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள், ஏற்க மறுக்கின்றன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான, ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற, கோரிக்கையும்ஏற்கப்படவில்லை. தமிழகத்தில், பல தனியார் பள்ளிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், தகுதியற்ற நிலையில் இருப்பினும், அவை, தொடர்ந்து இயங்க, அரசு ஊக்குவிக்கிறது;
இதனால், அரசு பள்ளிகளில்,மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. எங்களின் குறைகளை, சட்டசபையில் பேச, எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து,புறக்கணிக்கப்படுவதால், வரும், லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும். இவ்வாறு,அவர் கூறினார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து, புறக்கணிக்கப்படுவதால், வரும், லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின்அதிருப்தி எதிரொலிக்கும்,'' என, ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர்,செந்தில்குமார் கூறினார்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்,கூட்டு நடவடிக்கைக் குழுவின், நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டியில், நேற்று,கோரிக்கைப் பேரணி நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், :தமிழகத்தில், 1.75 லட்சம்,தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான, ஊதியம் வழங்கவேண்டும் என்ற, எங்களின் கோரிக்கையை, ஆட்சிக்கு வரும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள், ஏற்க மறுக்கின்றன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான, ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற, கோரிக்கையும்ஏற்கப்படவில்லை. தமிழகத்தில், பல தனியார் பள்ளிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், தகுதியற்ற நிலையில் இருப்பினும், அவை, தொடர்ந்து இயங்க, அரசு ஊக்குவிக்கிறது;
இதனால், அரசு பள்ளிகளில்,மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. எங்களின் குறைகளை, சட்டசபையில் பேச, எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து,புறக்கணிக்கப்படுவதால், வரும், லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும். இவ்வாறு,அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...