27 May 2024

 நாளை முதல் கலந்தாய்வு ... கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!





அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.


இவை குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் தொடங்கப்படும். 


இதில் முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே 28ம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை முதல் மே 30ம் தேதி வரை நடைபெறுகிறது.


 அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை மாதம் 3ம் தேதி தொடங்குகின்றன. 2023-24ம் கல்வியாண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 252 மாணவர்கள், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், 78 திருநங்கைகள் என 2 லட்சத்து 43 ஆயிரத்து 604 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இது குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்கள் /www.tngasa.in/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 04424343106 / 24342911 எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 TNPSC Group 4 Exam; டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?



டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம். 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். 


இந்தநிலையில், குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்தநிலையில், இன்று (மே 27) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதனை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.


குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?


முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.


அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பொத்தானை அழுத்தவும்.


பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும்.


இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், ஹால் டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். 


இப்போது திரையில் தோன்றும் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2024 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்று இருக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.


இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.


இப்போது திரையில் குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 வரும் ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வு தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து வர தடை: 6,244 பதவிகளுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர்



குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடக்கிறது. 6,244 பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வை சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத உள்ளனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது.


இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 6,244 பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


 இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடக்க இருக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை நடக்கிறது.


தேர்வுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், தேர்வர்கள் முழு வீச்சில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 


இதன் ஒரு பகுதியாக வரும் வாரத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது. ஒரு திருவிழா போல குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதனால், விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


அதே நேரத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட எழுது பொருட்களைத் (கருமைநிற மை கொண்ட பந்துமுனை பேனா) தவிர, அலைபேசி (செல்லுலார் போன்கள்), மின்னனு அல்லது இதர வகை கணிப்புக் கருவிகள், நினைவூட்டுக் குறிப்புகள் உள்ளடங்கிய கைக்கடிகாரங்கள் மற்றும் மோதிரங்கள், புளூ டூத் சாதனங்கள், தொடர்புச் சில்லுகள், பதிவு செய்யும் கருவிகள் ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது பிற மின்னனுச் சாதனங்களான கைக்கடிகாரம் அல்லது மோதிரம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகவோ பயன்படுத்துவது மற்றும் மின்னனு அல்லாத பி மற்றும் ஜி தரவுப் புத்தகம்,

கணிதம் மற்றும் வரையும் கருவிகள், மடக்கை அட்டவணை, படியெடுக்கப்பட்ட வரைபடங்கள், புத்தகங்கள், மடக்கை விதிகள், குறிப்புகள், தனித்தாள்கள், கையேடுகள், குறிப்பேடுகள், கைப்பைகள், போன்றவற்றை தேர்வுக்கூடத்திற்குள் கொண்டுவரக்கூடாது. அவ்வாறான தடை செய்யப்பட்ட பொருட்களை அல்லது கருவிகளை வைத்திருப்போர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அவர்களது விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படுவதுடன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.


தேவை எனக் கருதப்படின் அவ்விடத்திலேயே சோதனைக்கு (உடற்சோதனை உட்பட) உட்படுத்தப்படுவர். தேர்வர்கள் அவர்களின் சொந்த நலன் கருதி கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு கூடத்திற்கு எடுத்துவர வேண்டாம் என அறிவுறுத்துவதுடன் அப்பொருட்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர இயலாது எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


* தேர்வுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், தேர்வர்கள் முழு வீச்சில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.


* எழுத்து தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடக்க இருக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை நடக்கிறது.


* வரும் வாரத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது

.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...