Posts

Showing posts from May 21, 2023
Image
  எம்.எஸ்சி. படிப்புக்கு 26-க்குள் விண்ணப்பிக்கலாம் M.Sc., படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க மாணவர்கள் மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணாபல்கலை. தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) மற்றும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (MIT) இயங்கி வருகின்றன. இவற்றில் எம்.எஸ்சி. (2 ஆண்டு) படிப்பில் சேருவதற்கு பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடத்தப்படும். அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இப்படிப்பில்சேர விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக மே 26-ம் தேதிமாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  இதில் தகுதியானமாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://cfa.annauniv.edu/cfa/msc22.html  என்ற வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம்.  மேலும்  044-22358314 /358276 என்ற தொலைபேசி எண் அல்லது dircfa@annau
Image
  பகுதி நேர ஆசிரியர்கள் நாளை டிபிஐ-ல் போராட்டம்! கண்டுகொள்ளுமா விடியா அரசு? நாளை 22.05.2023லிருந்து பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் பணியினை நிரந்தரமாக்கக் கோரி இந்த உண்ணா விரத போராட்டத்தினை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நிகழ்த்த உள்ளனர். திமுக தனது வாக்குறுதியில் சொல்லிய 181 வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டி தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த மாதங்களில் பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  சமீபத்தில் கூட டெட் தேர்வானவர்களுக்கு அரசுப்பணி இன்னும் சரியாக வழங்கப்படவில்லை என்று டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் போராடி தற்காலிகமாக போராட்டத்தினை தள்ளிவைத்திருந்தனர். இந்த விசயம் ஓய்வதற்குள் நாளை பத்தாயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் போராட உள்ளார்கள் என்று வந்திருக்கும் செய்தி திமுக அரசின் கையாலாகாதத் தனத்தினையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பின்னடைவான பணியையும் காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தப் போராட்டம் காலவரைய
Image
  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / வரும் 26.05.2023 (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மறுகூட்டல் விண்ணப்பம் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரும் மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும், 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். அதே போல், மறுகூட்டல் கோரும் பத்தாம் வகுப்பு பள்ளிமாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்களிலும் 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுத்தேர்வு! தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய -பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத்தேர்வு 27.06.2023 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவ
Image
ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.! தமிழ்நாடு அரசிடம் சீமான் கோரிக்கை... குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். அரசுத் துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டொன்றுக்கு, வெறும் 10000 பணியிடங்கள் மட்டுமே குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.  ஆட்சிக்கு வந்தால் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும். அதிமுக அரசு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சராசரியாக 10000 பணியிடங்கள் என்ற அளவில் பணியிடங்களை நிரப்பி வந்தது. அதுமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத்தேர்வும் நடைபெறவில்லை. ஆகவே, பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள
Image
  பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 9 வரை விண்ணப்பம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது. விண்ணப்பக் கட்டணம் ரூ.150: இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட் டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை. விருப்பமுள்ளவர்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப் படும். இணைய வசதி இல்லாத மாணவர்கள் அருகே உள்ளசேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல்விவரங்களை மேற்கண்