26 January 2025

 NEET 2025 New Pattern: நீட் தேர்வு வினாத்தாளில் முக்கிய மாற்றம்- என்டிஏ அறிவிப்பு



 மருத்துவ இளநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக, தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.


இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும் ரத்து செய்யப்பட உள்ளது.


இதுகுறித்து என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


''அனைத்து இளங்கலை நீட் தேர்வர்களுக்கும் (NEET (UG)- 2025) முக்கிய அறிவிப்பு வெளியாகிற்து. அதன்படி, கேள்வித் தாள் முறையும் தேர்வு நேரமும் கோவிட் காலத்துக்கு முந்தைய முறைக்கு மாற்றப்படுகிறது. இதன்படி, செக்‌ஷன் பி என்னும் தெரிவு இனி நடைமுறையில் இருக்காது.


180 கேள்விகளும் கட்டாயம்


இதன்மூலம் மொத்தம் 180 கேள்விக்குக் கட்டாயம் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். அதாவது இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியல் பாடத்தில் 90 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். மொத்தம் 180 கேள்விகளுக்கும் விடை தர வேண்டியது முக்கியம்.


இதை 180 நிமிடங்களில் அதாவது 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். இதன்மூலம் கொரோனா காலத்தில் ஆப்ஷனல் கேள்விகள் அளிக்கப்பட்டதும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதும் ரத்து செய்யப்படுகிறது''.


இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


ஒரே ஷிஃப்ட்டில் பேனா, காகித முறையில் நீட் தேர்வு


ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு ) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


அதேபோல தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும், இந்திய மருத்துவ முறையின் BAMS, BUMS மற்றும் BSMS உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நீட் தேர்வு தேவை என்று NTA அறிவித்தது. தேசிய ஹோமியோபதி ஆணையத்தின் கீழ் BHMS படிப்பிற்கான சேர்க்கைக்கும் நீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் NTA தெரிவித்துள்ளது.


மேலும், எம்என்எஸ் (மிலிட்டரி நர்சிங் சர்வீஸ்) விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. 2025 ஆம் ஆண்டிற்கான ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் நர்சிங் படிப்புகளும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்த அறிவிக்கைக்கு https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/01/20250125100.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


அதேபோல 011 - 40759000 என்ற தொலைபேசி எண் மூலமும் neetug2025@nta.ac.in இ- மெயில் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.


கூடுதல் விவரங்களுக்கு: www.neet.nta.nic.in

 நீட் தேர்வு எழுதும் மாணவர்களா? விண்ணப்பிக்கும் முன் இதை பாருங்க.. ரொம்ப முக்கியம்!



நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் APAAR ID கட்டாயமில்லை என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.


APAAR ID கட்டாயமில்லை


இந்த படிப்புகளுக்கு அகில இந்திய ஒடுக்கீட்டின் படி கலநிந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கு தகுதியானர்கள். 


நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வில் உரிய மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்பம் விரைவில் தொடங்க உள்ளது. 


இதனால் மாணவர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளன. இந்த சூழலில், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க APAAR ID கட்டாயம் இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு மற்றும் APAAR ID கட்டாயம் என்று கூறப்பட்டிருந்ததது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. 


இந்த சூழலில், நேற்று தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க APAAR ID கட்டாயமில்லை என்று கூறிய தேசிய தேர்வை முகமை, APAAR ID பெறுவது குறித்து வீடியோவை வெளியிட்டிருக்கிறது.


APAAR ID என்பது என்ன?


APAAR ID என்பது Automated Permanent Academic Account Regiter என்பதாகும். இந்த APAAR ID என்பது பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள மாணவர்கள் வைத்து கொள்வதாகும். இந்த APAAR ID மூலம் மாணவர்கள் தங்களது கல்வி பயணத்தை ஒழுகமைத்துக் கொள்ள முடியும்.


 அதாவது, மாணவர்கள் தங்களது சான்றிதழ்கள், மதிப்பெண்கள் போன்றறை டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். இது மாணவர்களின் இடமாற்றத்திற்கு பெரிதும் உதவும். மேலும், மாணவர்களின் ஒட்டுமொத்த பதிவையும் பாதுகாப்பாக வைக்க உதவும். இதனை மாணவர்கள் விண்ணப்பித்து வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...