Posts

Showing posts from June 1, 2025
Image
  காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களை வைத்து அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமா?- டிடிவி தினகரன் தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களையும், ஆலோசகர்களையும் வைத்தே அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக அரசு?என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் டி உள்ளிட்ட பணியிடங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 144 அரசுப் பணியாளர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வுபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதியில் 25 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்பதற்கு அரசுத்துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே சாட்சியாக அமைந்திருக்கிறது. ஒவ்...
Image
  அரசுப்பணியில் ஆண்டுக்கு 50,000 பேர் ஓய்வு.. 5 வருஷத்துல எத்தனை பேரை வேலைக்கு எடுத்து இருக்கீங்க..? - தமிழக அரசை சாடும் அன்புமணி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 8144 பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். மே மாத இறுதியில் அரசு ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெறுவது இயல்பானது தான். ஆனால், அவ்வாறு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் கண்டிக்கத்தக்கது ஆகும். ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்பதால், மே மாத இறுதியில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற மாதங்களில் சராசரியாக 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொண்டாலும் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், அந்த இடங்களை நிரப்பத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா? என்பது தான் வினா ஆகும். ஆனால், அதற்கான பதில் காலியிடங்கள் நிரப்பப்படவில்ல...
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றம் - வரும் ஜூன் மாதம் முதல் அமல்..! டின்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், OMR விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமானது OMR Answer Sheet - Sample" எனும் தலைப்பில் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கருமை நிற பந்துமுனை பேனாவைப் பயன்படுத்தி கருமையாக்க வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், OMR விடைத்தாளின் பக்கம்-1 பகுதி-II-இல், தேர்வர்கள் உறுதிமொழி அளித்து, கையொப்பமிட வேண்டும். மேலும், தேர்வாணையத்தால் நடத்தப்படவிருக்கும் இனிவரும் அனைத்து OMR முறை தேர்வுகளிலும் பங்கேற்க உள்ள தேர்வர்கள், புதிய மாதிரி OMR விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்து கொண்டு தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான முதல் தேர்வாக குருப் 1 தேர்வி வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. அத்தேர்வில் இருந்து புதிய OMR தாள் பயன்படுத்தப்பட உள்ளது....