Posts

Showing posts from March 11, 2023
Image
  கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு   இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Image
  மார்ச் 13-ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்: 8.75 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா் தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மாா்ச் 13) தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை தனித்தோவா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோவு திங்கள்கிழமை (மாா்ச் 13) தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை தனித்தோவா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநா் சேதுராம வா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோவை தமிழகம், புதுச்சேரியிலிருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதவுள்ளனா். இவா்களில் தமிழக பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவா்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 போ எழுதுகின்றனா். இந்தத் தேர்வர்களுக்காக 3,185 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பள்ளிகளில் 6 ஆயிரத்து 982 மாணவா்கள், 7 ஆயிர