Posts

Showing posts from April 29, 2017
Image
''லஞ்சத்திற்கான நுழைவு வாயில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு!' கொதிக்கும் கல்வியாளர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்தத் தேர்வால் எந்தப் பயனும் இல்லை என்றும், குளறுபடியும், லஞ்சமும் தலைவரித்தாடும் சூழல் உருவாகும் என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.அவ்வாறு வெற்றி பெற்றால்தான் அவர்கள் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற விதிமுறை உள்ளது. தகுதித் தேர்வை எழுதி வெற்றி பெறுவதற்கானக் காலக் கெடுவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்துள்ளது. லஞ்சம் பெறவே இந்த தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வை தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் எழுதுகின்றனர்.தாள் ஒன்றை இட
Image
TRB மூலம் 6,390 பேருக்கு வேலை ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர்,செங்கோட்டையன், நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்த ஆண்டு, 'டெட்' தேர்வு போக, ஆறு போட்டி தேர்வுகள் நடக்க உள்ளன. அதன் விபரம்
TET தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு. பிறப்பிப்பதற்குமுன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்குகல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பதவி இடம் கடந்த 2011-ம்ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி காலியானது. இந்த பதவியை நிரப்ப அதேஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பள்ளி நிர்வாகம், உதவி தொடக்கப்பள்ளிஅதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதையடுத்து அந்தபதவியை நிரப்ப, உதவி தொடக்கப்பள்ளி அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டுஜனவரி 31-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலைவாய்ப்புமையத்தில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டன. பள்ளிநிர்வாகமும் காலிப்பணியிடம் குறித்து பொது விளம்பரம் வெளியிட்டது. இதன்பின்னர் நடந்த நேர்முகத் தேர்வில், சரவணபாபு என்ற ஆசிரியர்கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்றேஅவர் பதவியையும் ஏற்றுக்க
4500 புதிய ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்க முடிவு. இதில் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில்  வெளியாக உள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3000 பணியிடங்கள் காலியாக உள்ளன.அவற்றில் 2,119 முதுநிலை ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம்  டி.ஆர்.பி நிரப்ப உள்ளது.அதேநேரத்தில் கூடுதலாக 1600 முதுநிலை ஆசிரியர்களும்,748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது
TNPSC :குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிக்கையில், "தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, 27.04.2017 அன்று வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில்வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1 953 தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப்பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர்மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953  காலிப்பணியிடங்கள். கல்வித்தகுதி – (i)உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு / இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ii)நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக