மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 வாரத்தில் பதில் தர தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.கொள்கை முடிவு எடுக்க கால அவகாசம் கேட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 April 2015
கணினி ஆசிரியர்கள் 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை
திண்டுக்கல்: 'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர்.
அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத்திட்டத்திற்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.
திண்டுக்கல்: 'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர்.
அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத்திட்டத்திற்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.
குரூப்1, 2 பிரிவில் காலியாக உள்ள 1060 பணியிடத்துக்கு இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு
குரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 139 தட்டச்சர் பதவி, தோட்டக்கலை துறை அதிகாரி பதவியில் காலியாக உள்ள 189 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நேற்று துவங்கியது. ஒரே நாளில் 3 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
இப்பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: குரூப் 1 பதவியில் போலீஸ் டி.எஸ்.பி (25 காலி பணியிடம்), துணை கலெக்டர்(13 காலி பணியிடம்) என 60க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள், குரூப் 2வில்(நேர்முக தேர்வு பதவி) 1000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான மறுநிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்படும்.
இந்தாண்டுக்கான கால அட்டவணையில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த பணியிடங்கள் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதத்துக்குள் வெளியிடப் படும். அதே போல, டி.இ.ஓ. தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.தேர்வுகள் அனைத்தும் உடனுக்குடன் நடத்தி விரைவில் தேர்வு முடிவு களை வெளியிட நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி தூரிதப்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை காண விரும்புவோர் டி.என்.பி. எஸ்.சி. இணையதளத்தில் தேர்வு எண், பிறந்தநாள் தேதியை டைப் செய்து பார்க்க வேண்டும். அதில், அவர்களது மதிப்பெண் மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மதிப்பெண்ணை பார்க்க முடியாது. தற்போது, இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரின் மதிப்பெண்ணை மட்டுமல்ல தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் எவ்வளவு மார்க் வாங்கி உள்ளனர் என்பதை பார்க்க முடியும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
குரூப்1, 2வில் காலியாக உள்ள 1,060 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும்’ என்று டி.என். பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குரூப்2 பதவியில் 1130 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு 5239 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை பிரா ட்வேயில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 139 தட்டச்சர் பதவி, தோட்டக்கலை துறை அதிகாரி பதவியில் காலியாக உள்ள 189 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நேற்று துவங்கியது. ஒரே நாளில் 3 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
இப்பணிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: குரூப் 1 பதவியில் போலீஸ் டி.எஸ்.பி (25 காலி பணியிடம்), துணை கலெக்டர்(13 காலி பணியிடம்) என 60க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள், குரூப் 2வில்(நேர்முக தேர்வு பதவி) 1000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியான மறுநிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்படும்.
இந்தாண்டுக்கான கால அட்டவணையில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த பணியிடங்கள் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதத்துக்குள் வெளியிடப் படும். அதே போல, டி.இ.ஓ. தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.தேர்வுகள் அனைத்தும் உடனுக்குடன் நடத்தி விரைவில் தேர்வு முடிவு களை வெளியிட நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி தூரிதப்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை காண விரும்புவோர் டி.என்.பி. எஸ்.சி. இணையதளத்தில் தேர்வு எண், பிறந்தநாள் தேதியை டைப் செய்து பார்க்க வேண்டும். அதில், அவர்களது மதிப்பெண் மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் மதிப்பெண்ணை பார்க்க முடியாது. தற்போது, இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரின் மதிப்பெண்ணை மட்டுமல்ல தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் எவ்வளவு மார்க் வாங்கி உள்ளனர் என்பதை பார்க்க முடியும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...