Posts

Showing posts from September 24, 2022
Image
  அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் பட்டியல் தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் எனவும், அரசுப் பணிக்கான 60 வயதை கடந்தவர்கள் 5,590 பேர் உள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, கடந்த மாதம் (ஆக.31) ஆம் தேதி வரை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த பதிவு செய்தவர்ளின் மொத்த எண்ணிக்கை 73,99,512. இவற்றில் ஆண்கள்- 34,53,380, பெண்கள்- 39,45,861, மூன்றாம் பாலினம்- 271 என பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பதிவு செய்தவர்களின் வயது வாரியான விவரங்களின் படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் -23,01,800 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள்-29,88,001 பேரும், 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் மேலை நாட்டினர்கள்- 18,68,931 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர
Image
  உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் டிஆர்பி தேர்வு. அமைச்சர் பொன்முடி சூப்பர் தகவல்!! உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிற உதவிப் பேராசிரியர்கள் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அவர்களில் 955 துணை பேராசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படாமலேயே இருந்தது. இவர்கள் 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணிநிரந்தரம் செய்யவில்லை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்வது காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை. அதன்படி, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 2 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற 955 உதவிப் பேராசிரியர்கள் 9 ஆண்டுக்கு முன்தேதியிட்டு பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர