Posts

Showing posts from June 16, 2023
Image
  நீட் தேர்வில் புதுவையில் 3,140 மாணவர்கள் தேர்ச்சி - கடந்த ஆண்டை விட 2.15% உயர்வு நீட் தேர்வில் புதுச்சேரியில் 3,140 மாணவ, மாணவி கள் தேர்ச்சி அடைந்தனர்.கடந்த ஆண்டை விட 2.15 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடந்தது. இதில், புதுவையில் 5 ஆயிரத்து 714 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் தேசிய தேர்வு முகமை இணையத்தில் வெளியானது. புதுவையை சேர்ந்த 3 ஆயிரத்து 140 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை மாணவர் அசோக்குமார் 720-க்கு 700 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் 287-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட 2.15 சதவீத புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.   ஆளுநர் தமிழிசை வாழ்த்து: இந்நிலையில் ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்தமாணவன் பிரபஞ்சன் மற்றும் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 இடங்க ளைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாண
Image
  7,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை தமிழக அரசு பள்ளிகளில், 7,000 இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 37,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவற்றில், 6,000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி பயிற்சி மாநிலம் முழுதும் உள்ள, 24,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, இடைநிலை ஆசிரியர்களே விளையாட வைக்கின்றனர்.அங்கு உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. இந்த மாணவர்களுக்கு, மாநில, தேசிய போட்டிகள் கிடையாது. அதே நேரம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகள் உண்டு.இதற்காக மாணவர்களை, பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வழியே, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்.இதுகுறித்து,  தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் கூறியதாவது:ஆறாம் வகுப்ப
Image
  Supplementary Exam Hall Ticket: 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் எப்போது?- வெளியான அறிவிப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளை ஜூன் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அத்துடன் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ’’மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. துணைத் தேர்வு எழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் (தட்கல் உட்பட) 20.06.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்குச் சென்று “HALL TICKET என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில் "HSE FIRST YEAR / SSLC - JUNE/
Image
  புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு சுகாதாரத் துறை நுழைவுத் தேர்வு: விரைவில் தேதி அறிவிப்பு புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் பிஎஸ்சி நர்சிங் படிக்க விரும்புவோர் மாநில சுகாதாரத் துறை நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதி, அதில் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. ஐந்து பாடங்களுக்கு தலா 20 மதிப்பெண்கள் வீதம் தேர்வு நடக்கும். விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும். பிஎஸ்சி நர்சிங் நான்கு ஆண்டு படிப்புக்கு பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் விண்ணப்பித்து அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்கள் பெற்று வந்தனர். தற்போது நடப்பு கல்வி ஆண்டில் டெல்லியில் உள்ள நர்சிங் கவுன்சிலிங் புதிய விதிமுறைகளை வைத்துள்ளது. அதன்படி புதுவை மாநில அரசு செவிலியர் கல்லூரி (மதர் தெரசா) மற்றும் தனியார் செவிலியர் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் செவிலியர் கல்லூரிகள் ஆகியவற்றில் நர்சிங் படிக்க புதிய விதிமுறைகளை வைத்துள்ளது. ‌ அதன்படி புதுச்சேரி சுகாதாரத் துறையால் நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதி அதில் பெரு
Image
  நீட் முதலிடம்- பெற்றோர் அரசு ஆசிரியர்கள்..தனியார் கோச்சிங் ரூ13 லட்சம்- சாமானியனுக்கு இது சாத்தியமா? நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் முதலிடம்; முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.. இது கொண்டாட்டத்துக்குரியது.. நீட் தேர்வையும் தமிழ்நாடு ஏற்றுக் கொண்டது என்கிற ஆனந்த கூச்சல்கள் கடும் பேரிரைச்சலாகவே கேட்கின்றன. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனை முன்வைத்து பல்வேறு கொண்டாட்டங்களைப் பார்க்க முடிகிறது நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்களுடன் முதலிடம் - தமிழ்நாடு மாணவர் என சொல்லப்படும் கவுஸ்தவ் பவுரி மற்றும் சூர்யா சித்தார்த், ஆகியோரும் 3, 6,9-வது இடங்களைப் பிடித்துவிட்டனர் - நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள் - தமிழ்நாட்டில் 1,47,583 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்; இதில் தேர்வு எழுதியவர்கள் 1,44,516 பேர்; தேர்ச்சி பெற்றவர்கள் 78,693 பேர். - தமிழ்நாட்டு மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் 54.5% - நீட் தேர்வ