Posts

Showing posts from July 3, 2019
ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை தற்போது புதிதாக நியமிக்க இயலாது, -, பள்ளி கல்வித் துறை அமைச்சர் 'பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்: காங்., -பிரின்ஸ்: அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், காலை, 7:00 மணிக்கு சென்று, இரவு, 8:00 மணிக்கு, வீடு திரும்புகின்றனர். அங்கு, அடிமைகள் போல படிக்க வைக்கப்படுகின்றனர். மாணவர்கள், கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: இப்புகார் குறித்து, துறையில் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரின்ஸ்: அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம், நன்கொடை வசூலிக்கப்படுகிறது. செங்கோட்டையன்: தனியார் பள்ளிகளி