Posts

Showing posts from April 30, 2022
Image
  TANCET தேர்வு - நாளை மறுநாள் ஹால் டிக்கெட் வெளியீடு! நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை https:/tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு TANCET எழுத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் BE / B.Tech முடித்தவர்
Image
  அரியர் மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு..! இதுதான் இறுதி வாய்ப்பும்..! உடனே இதை செய்யுங்க..! சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியா் தோவுகளை முடிக்காத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 2015-16ஆம் கல்வியாண்டு முதல் சோந்த மாணவா்களுக்கு நடப்பாண்டு நடைபெறும் தோவுகளில் அனுமதி அளிக்கப்படும். இது, அவா்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். அதேபோன்று, 2015-2016 முதல் 2018-2019ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் சோந்த முதுநிலை மாணவா்களுக்கு, 2022 ஏப்ரல் மாத பருவத் தோவே இறுதி வாய்ப்பாக இருக்கும். இது குறித்த கூடுதல் தகவல்களை இணையதள முகவரியில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியா் தோவெழுத தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்கள் பலரும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு இறுதி வாய்ப்பாக சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Image
  TNPSC English 2: பொது ஆங்கிலப் பிரிவில் தேர்வுக்கு தயாராகுவது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2ஏ தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வில், பொது ஆங்கிலம்( அல்லது தமிழ்) மற்றும் பொதுப் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். பொது ஆங்கிலத்தில் இருந்து மட்டும் 100 கேள்விகள் இடம்பெறும். தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம். From a Railway Carriage - 18, 19ம் நூற்றாண்டுகள் ஐரோப்பாவில் இயற்கை விஞ்ஞானிகளின் (Natural Scientist) தொடக்கத்தைக் குறித்தன. விஞ்ஞான ரீதியாக மட்டுமே உலகை அணுக முடியும் என்ற கோட்பாடுகள் உருவாக்கம் பெற்றன. இந்த அறிவியல் புரட்சியின் மணிமகுடமாக தொடர்வண்டி(ரயில்) இருந்தது. புராதான மனிதனின் தொன்மைக் கதைகள், சடங்குகள், வாழ்வியல் முறைகள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதனை கேள்விக்
Image
  தமிழகத்தில் 84,414 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் - ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 84 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கு நடைபெற உள்ளது, இந்த 2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்திலிருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில் இருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் நீர் தேர்வுக்காக வந்துள்ளது, அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 11 லட்சம் விண்ணப்பதாரர்களின் 1.5 லட்சம் பேர் மகாராஷ்டிரத்தில் இருந்தும் 1.2 ஒரு லட்சம் பேர் உத்திரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பி
  எரிக்கும் வெயில்! குழந்தைகளை வதைக்க வேண்டாம்! ஆல்பாஸ் பண்ணுங்க! மாணவர்களுக்கு ஆதரவாய் பாமக ராமதாஸ் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எரிக்கும் வெயிலில் குழந்தைகளை வதைக்க வேண்டாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 9 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கோடை காலம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது இருக்கும் நிலையில் பகல் நேரங்களில் மிகக் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு வெப்ப அலை காரணமாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பள்ளி குழந்தைகளை வதைக்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ராமதாஸ் அறிக்கை இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்திரி வெயில் காலத்திலும் இயங்கும்; மே 13-ஆம் தேதி வர