Posts

Showing posts from December 21, 2022
Image
  தெற்கு ரயில்வே பணிகளில் 80% வட இந்தியர்கள்.! பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள் நிரம்பியுள்ளனர் - அன்புமணி ரயில்வே பணியிடங்களில் 80 சதவகிதம் வட மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதாற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு தொடர்வண்டித்துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது எழுப்பியிருக்கிறது. தெற்கு ரயில்வேயில் 80% வட மாநிலத்தவர் தெற்கு தொடர்வண்டித்துறை, ஐ.சி.எஃப் எனப்படும் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், முதுநிலை வணிகம் மற்றும் பயணச்சீட்டு
Image
  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளா், இரவுக்காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு - வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள வேலூா் மாவட்ட இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளா் ஒரு பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமை உள்ளவா், இன சுழற்சியில் கரோனா தொற்று, இதர காரணங்களால் பெற்றோா் இருவரையும் இழந்த (இருபாலா்) 8-ஆம் வகுப்பு தோச்சி பெற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இரவுக்காவலா் ஒரு பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமையற்றவா், இனசுழற்சிக்கு தகுதியான எழு
Image
  நெருங்கும் பொதுத்தேர்வு.. நெருக்கடியில் மாணவர்கள்.. அரசு செவி சாய்க்குமா? முன்பு படித்த பள்ளிகளின் உறுதி சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும் என சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பிறப்பித்த உத்தரவால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இந்த 2022-23ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு எழுதுவதற்கு தாங்கள் முன்னர் படித்த பள்ளிகளிலிருந்து எந்த பிரிவில், எந்த மாெழியில் படித்தார்கள் என்பதற்கான 'உறுதிச் சான்றிதழ்' (Bonafide certificates) வாங்கி வர வேண்டும் என சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் துறை ஆண்டுதோறும் தயாரிப்பது வழக்கம். அந்தவகையில் வரக்கூடிய மார்ச், ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள பொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் ஆகின. சிரமத்தில் பள்ளி மாணவர்கள்: இதனிடையே முன்னதாக, மாணவர்களின் பெயரை சேர்ப்பதற்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு
Image
  சிபிஎஸ்இ இணைப்புக்கு புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை சுற்றறிக்கை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தமிழக அரசின் பாடதிட்டத்தை பின்பற்றி வரும் நிலையில் சிபிஎஸ்இ இணைப்புக்கு அரசு பள்ளிகளை விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக அரசின் கல்வி பாடத் திட்டமும், மாஹே பிராந்தியத்தில் கேரளாவின் பாடதிட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா தேர்வுகட்டுப்பாட்டு துறையின் மூலம் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. அவை புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பகங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.  கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒரு சில அரசுப்பள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இதையடுத்து, 6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்