Posts

Showing posts from January 5, 2015
ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான சான்று கேட்கக் கூடாது ஆசிரியர் பணி நியமனத்தில், தமிழ் வழிக்கல்வி என்பதற்கான சான்று அளிக்குமாறு கேட்கக்கூடாது என, உயர்கல்வித் துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள பாளையபுரத்தைச் சேர்ந்த எம். மல்லிகா, தாக்கல் செய்த மனு விவரம்: முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப 9.5.2013இல் உயர்கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, தாழ்த்தப்பட்டோருக்கான பெண்கள் பிரிவில், தமிழ் வழியில் படித்ததற்காக இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பித்தேன். தேர்வில் வெற்றி பெற்றதால் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டேன். அனைத்து கல்விச் சான்றுகளையும் அதிகாரிகள் சரிபார்த்தனர். ஆனால், தமிழ் வழியில் படித்ததற்கு தனியாகச் சான்று அளிக்கவேண்டும் எனக் கூறிய அதிகாரிகள், வாய்மொழியாக கால அவகாசம் அளித்தனர். கடந்த 2014 ஆகஸ்ட் 6இல் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், என் பெயர் இடம் பெறவில்லை. எனக்கு உரிய இடஒதுக்கீடு அடிப்படை