13 July 2017

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேவையற்றது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் தூக்கமின்றி கடினமாக உழைக்கிறார்கள். அதற்காக தினசரி பள்ளி முடிந்த பின்பு டியூசனுக்கு சென்றும் படிக்கின்றனர். இதேபோல பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கஷ்டப்படுகிறார்கள்.



இந்த நிலையில் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்திற்கு ஆளாவார்கள். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவதுடன், விரக்தி அடைந்துவிடுவார்கள்.

எனவே பிளஸ்-1 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “போட்டிச்சூழல் அதிகம் உள்ள நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் 2 ஆண்டுகள் பிளஸ்-2 பாடத்தை படிக்கின்றனர். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்று பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லூரியின் முதலாம் ஆண்டில் சிரமப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்வி ஆலோசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது” என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிளஸ் 2 பொது தேர்வு; புதிய விதிகள் தயார் மாதிரி தேர்வு நடத்த முடிவு

பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசாணை வெளியிடும் முன், மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சீர்திருத்த நடவடிக்கைகளில், முக்கிய அம்சமாக, தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 
மேலும்,தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ்1 பொது தேர்வு, பாடத்துக்கு, 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு உள்ளது.தேர்வு நேரமும், இரண்டரை மணி நேரமாக மாற்றப்பட்டு உள்ளது. இதே முறை, அடுத்த ஆண்டு, பிளஸ் 2 மாணவர் களுக்கும் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், புதிய தேர்வு முறையில், வினாத் தாள் முறை மற்றும் தேர்வு விதிகளை உருவாக்க, தமிழக அரசின் சார்பில் வல்லுனர் கமிட்டி அமைக் கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளியை ஒருங் கிணைப்பாளராகவும், தேர்வுத் துறை முன்னாள் இயக்குனர் தேவராஜனை, தலைவரா கவும் நியமித்து, கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, பல்வேறு பாடத்திட்ட வினாத்தாள் வகைகள், ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா பொதுத் தேர்வு முறை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட வினாத்தாள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புதிய விதிகளை வகுத்துள்ளது. 
இந்த அறிக்கையை, தமிழக பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரனிடம், வல்லுனர் கமிட்டி தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் முறைக்கு, தமிழக பள்ளிக்கல்விதுறை சார்பில், விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.அதற்கு முன், புதிய வினாத்தாள் முறையின் படி, மாதிரி வினாத்தாள் வடிவ மைத்து, தற்போது, பிளஸ் ௧ முடித்து, பிளஸ் 2 படிக்கும் சில மாணவர்களுக்கு, மாதிரி தேர்வு நடத்தப் பட உள்ளது. 

புதிய முறையில் மாணவர் கள் தேர்வு எழுதும் நேரம், அவர்களின் சிந்திக்கும் திறன், ஒவ் வொரு கேள்விக்கும் விடை எழுத தேவைப் படும் நேரம் ஆகியவற்றை, செய்முறை ஆய்வு மூலம் முடிவு செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...