30 December 2022

 குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதியிருந்தனர்


இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் காத்திருந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப்-4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

 கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி




தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


இதில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன் அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 'கடந்த பத்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலமாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அதில் பல குளறுபடிகள் இருந்தன. அது மட்டும் இல்லாமல் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதி ஆனவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது.


கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் சொன்னதன் அடிப்படையில், இணைச் செயலர் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகிய மூன்று பேர் கொண்ட அந்த குழு தான் அவர்களை நேர்முக தேர்வு வரவழைத்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள். மேலும் நேர்முக தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கேள்விகளை கேட்பதற்கு நியமிக்கப்படுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இந்த நேர்முக தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 


மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வு நடக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின்படி 19 கௌரவ விரிவுரையாளர்கள் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.


கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான காலியிடங்கள் மொத்தம் 50 பாடங்களில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எட்டு வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் பணிகளுக்கான நேர்முக தேர்வுகள் வருகிற நான்காம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் கூறினார். 


'விண்ணப்பதாரர்களிடம் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் நேர்முக தேர்வின் போது அவர்களின் திறனை அறிந்து தேர்வு செய்யப்படுவார்கள். தரத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பிஎச்டி படித்தவர்கள் மற்றும் நெட் ஸ்லேட் தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மூன்றாவதாக ஸ்லைட் நெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 


சரியான முறையில் தகுந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 9915 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். யார் எந்த பாடத்திட்டங்களில் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை நாளைக்கு அறிவிப்போம். இந்த தேர்வு முறையில் முழுக்க முழுக்க இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.' என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  கூறினார். 

 போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்களை பெண் என்றும் பாராமல் கைது செய்த தி.மு.க அரசு



ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அடுத்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.


இதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணை 149 ஐ ரத்து செய்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில்அரசானை 149 ஐ ரத்து செய்ய வேண்டும் .


2013 ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை நேற்று மாலைடன் நிறைவு செய்து திரும்ப வேண்டி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இது எடுத்து அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்திய. 100- க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


 சி.பி.எஸ்.இ 10 & 12 ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்.!



மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி மாதம் 2023ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காலையில் 10:30 மணிக்கு தொடங்கும் தேர்வுகள் மதியம் 01:30 வரையில் நடைபெறும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் 15ல் தொடங்கி, மார்ச் மாதம் 23ல் நிறைவு பெரும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

  TNPSC Group 4 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 3,935 காலிப்...