6 November 2014

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் 10-ம் தேதி முதல் விநியோகம்

 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜன.10-ம் தேதி நடைபெற இருக்கிறது. 

இதற்கான அறிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் இருந்து விநியோகம் தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் வழங்கப்பட இருக்கிறது. 

எனவே இப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பபடிவங்களை பெற்று பூர்த்தி செய்து 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
PGTRB Exam 2014-15 
PG TRB Application Sales From:10.11.2014 PG 
TRB Application Sales - Venue:Concern District - CEO Office, 
PG TRB Exam Date:10.01.2015. 

Notification Will Publish Soon in TRB Website.
Flash News :PG TRB முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகிறது

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-2014, 2014-2015 ) போட்டி எழுத்துத்தேர்வு 10.01. 2015 அன்று நடைபெறவுள்ளது இதற்கான அறிவிக்கை ஓரிரு தினங்களில் வெளியிடவுள்ளது .
நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

 கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (AEEO) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கின்றனர். 

பள்ளிகளை ஆய்வு செய்வது, மாணவர்களின் கல்வி நிலை மற்றும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், ஆசிரியர்களின் சம்பளம், அட்வான்ஸ், லோன் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது, பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎஃப்), பங்களிப்பு ஓய்வூதிய நிதி (சிபிஎஃப்) மற்றும் ஓய்வூதிய கணக்கு வழக்குகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்கிறார்கள். 

 உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனத்தில் 60 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 40 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெறுகின்றனர். இப்பணிக்கு முன்பு 100 சதவீதமும் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன.

 நேரடி நியமன முறை கடந்த 2009-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கு நேரடியாக 67 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 

 அதைத் தொடர்ந்து, 2-வது நேரடி நியமனம் 2012-ம்ஆண்டு 34 பேர் (2010-2011-ம் ஆண்டுக்கான காலியிடங்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நேரடி நியமனம் நடைபெறவில்லை. இதனால், பிஎட் பட்டதாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். 

2011-2012, 2012-2013, 2013-2014 என 3 கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டையும் (2014-2014) சேர்த்தால் 4 ஆண்டுகள் ஆகிவிடும். பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல் என வெவ்வேறு பாடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

 குறிப்பிட்ட பாடத்தில் பிஏ அல்லது பிஎஸ்சி பட்டப் படிப்புடன் பிஎட் பட்டம் பெற்றிருப்பவர்கள் தேர்வெழுதலாம். வயது 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மட்டும் 40 வயது வரை அனுமதிக்கப்படுகிறார்கள். 4 கல்வி ஆண்டுகளுக்குரிய நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி 652 கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுகோள் கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம்:
 உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி 652 கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுகோள்-கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம்

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...