Posts

Showing posts from March 5, 2013
ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வழக்கு  மதுரை: கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.  தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: பள்ளிகளில்13 முதல் 14 சதவீதம் மாணவர்கள் கற்றல்குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க மனநல அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிந்துள்ளது. கற்றலில் குறைபாடு உள்ள (டிஸ்லெக்சியா) மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது. புதிய வார்த்தைகளை கற்க முடியாது. தகுந்த இடத்தில், பொருத்தமானவார்த்தைகளை பயன்படுத்த தெரியாது.  உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதேநிலை நீடிக்கிறது. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இது நரம்பு தொடர்பான குறைபாடு என்கின்றனர். இம்மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல்நேரம் ஒதுக்க வேண்டும். அமைதியான சூழல்வேண்டும். பிறமொழிகளில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒலி-ஒளி காட்சி மூலம்கற்பிக்க வேண்டும்.  சென்னையில் இந்தி பாடத்தில் சரியாக கவனம் செலுத்தாத 14 வயது மாணவன், கத்தியால் குத்தியதில், ஆசிரியை இறந்தார். கற்றலி
பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் - அமைச்சர் வைகைச்செல்வன்  பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.மாநில பள்ளி கல்வித் துறைஅமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதல் முறையாக அமைச்சர் வைகைச்செல்வன் விருதுநகர் மாவட்டம் வந்தார்.  விருதுநகர் விருந்தினர் மாளிகையில் அவருக்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ ராஜூ, ஆர் டிஓ குணசேகரன், திட்ட அலுவலர் பிரபாகரன் மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதையடுத்து விருதுநகர் கேவிஎஸ் மேல் நிலைப்பள்ளியில் கல்வித்துறை உயர் அதிகாரி கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பே சுகையில், `விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் கடந்த 25 ஆண்டுகளாக முதலிடம் பெற்று, கல்வியில் முதன் மை மாவட்டமாக திகழ்கிறது. ஆசிரியர்கள் அர்ப்பணி ப்பு உணர்வுடன் பணியாற்றினால் சிறந்த மாணவர் களை உருவாக்க முடியும்.  கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.