3 April 2025

 புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கம்; விடிய விடிய காத்திருப்பு - மழையிலும் தொடர் போராட்டம்



புதுச்சேரியில் 288 ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு சட்டப்பேரவை அருகே விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்டட நிலையில் இன்று காலை மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


புதுச்சேரி அரசு பள்ளியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த 2019-ம் ஆண்டு 288 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதற்கிடையே கடந்த 29ந் தேதி 175 ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் நமச்சிவாயம், கல்வி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 288 ஆசிரியர் பணியிடங்களை, நிரந்தமாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.


இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கடந்த 31-ந் தேதி அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் நேற்று சட்டசபை வளாகம் முன்பு குவிந்தனர். அங்கு அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிபூங்கா நுழைவாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


இதற்கிடையே தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி நேற்று இரவு மாதா கோவில் வீதியில் காத்திருப்பு போராட்டத்தினை தொடங்கினர். இந்த போராட்டம் நேற்று இரவு முழுவதும் நீடித்தது. அவர்கள் செல்போலில் விளக்குகளை எரிய விட்டபடி போராட்டம் நடத்தினர். விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை புதுச்சேரியில் மழை பெய்யத்தொடங்கியது. மழையிலும் விடாது தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கம் தரப்பில் கூறுகையில், "தற்பொழுது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். தற்போது இக்கல்வியாண்டு பள்ளி திறந்துள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளனர். இது அரசு பள்ளிகளில் சேர்க்கையை குறைக்கும்." என்றனர்.

 25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.. வாங்கிய சம்பளத்தையும் முழுசா திரும்ப தரணும்! சுப்ரீம் கோர்ட் உத்தரவு




மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனங்களையும் ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.


இதற்கிடையே கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை இப்போது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அதாவது ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களில் பலர் எதுவுமே எழுதாத வெற்று ஓஎம்ஆர் தாள்களையே சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்குப் போலியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சட்டவிரோதமாக அவர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்பதே வழக்காகும்.


கொல்கத்தா ஐகோர்ட்


இந்த வழக்கை முதலில் கொல்கத்தா ஐகோர்ட் விசாரித்தது. 25 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனங்களையும் ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட், இதுவரை அவர்கள் பெற்ற சம்பளத்தையும் திரும்பத் தர வேண்டும் என்று கடந்தாண்டு உத்தரவிட்டது. இது அப்போது மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் செயல்முறையும் மோசடியால் நடந்துள்ளது என்றும் இதனால் அதன் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வ தன்மை சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


நீதிபதிகள் உத்தரவு


தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறியது. மோசடி மூலமாகவே பணி நியமனங்கள் நடந்துள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


இது மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க அரசே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. மோசடி செய்த சிலருக்காக மற்ற அனைத்து நியமனங்களையும் ரத்து செய்வது சரியானது இல்லை என்றும் மோசடி செய்தவர்கள் மற்றும் நியாயமாக பணியில் சேர்ந்தவர்கள் எனப் பிரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.


சுப்ரீம் கோர்ட் மறுப்பு


ஆனால், இதை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய ஆசிரியர் தேர்வு செயல்முறையை முடிக்குமாறு நீதிமன்றம் மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. 2016இல் தேர்ச்சி அடைந்தவர்கள் இந்தப் புதிய செயல்முறையிலும் தேர்ச்சி பெற்றால் அவர்கள் இத்தனை ஆண்டுகள் பெற்ற சம்பளத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை.


அதேநேரம் தேர்வில் தோல்வி அடைவோர் இத்தனை காலம் பெற்ற அரசு சம்பளத்தைத் திரும்ப தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் அவர்கள் தங்கள் வேலையில் தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வழக்கின் பின்னணி


கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 24,640 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 24,640 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், 25,753 பேருக்கு பணிநியமன கடிதம் வழங்கப்பட்டது. இதுவே மோசடி புகார் எழக் காரணமாகும். தொடர்ந்து நடந்த விசாரணையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் பலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கோரிக்கை





புதுச்சேரியில்  சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.


புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாணன் தலைமையில் ஏராளமானோா் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே உள்ள கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு, அவா்கள் புதுவை கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினியை சந்தித்து மனு அளித்தனா்.


அப்போது, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, அண்மையில் நடைபெற்ற மாதிரித் தோ்வில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தோல்வியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.


மேலும், பொதுத் தோ்வில் மாணவா்கள் விதிகளை மீறி பாடப் புத்தகங்களை பாா்த்து எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்துள்ளது.


எனவே, இதுபோன்ற செயல்களால் புதுவையின் கல்வித் தரம் பாதிக்கப்படும்.


இதனால், சிபிஎஸ்இ பாட முறையை திரும்பப் பெறவும், பொதுத் தோ்வில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்வித் துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...