Posts

Showing posts from April 7, 2017
பத்தாம் வகுப்பு தேர்வு விடைக்குறிப்பு -2017 Official Answer Keys Tamil 1 - Official Answer Key -  Click Here   **New** Tamil 2 - Official Answer Key -  Click Here  **New** English 1 - Official Answer Key -  Click Here   **New** English 2 - Official Answer Key -  Click Here   **New** Maths - Official Tamil Medium Answer Key -  Click Here   **New** Maths - Official English Medium Answer Key -  Click Here   **New** Science - Official Tamil Medium Answer Key -  Click Here   **New** Science - Official  English Medium Answer Key -  Click Here   **New** Social - Official Tamil Medium Answer Key -  Click Here   **New** Social - Official English Medium Answer Key -  Click Here   **New**
ஆய்வக உதவியாளர் பணி : அனுபவ சான்றிதழுக்கு பணம் ஆய்வக உதவியாளர் பணிக்கு, அனுபவ சான்றிதழ் வழங்க, பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 30ல் தேர்வு நடந்தது. எட்டு லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின் முடிவுகள், மார்ச், 24ல் வெளியாயின. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 9 முதல், 11 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பு  நடக்கிறது. ஒவ்வொரு சான்றிதழுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது.  எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, 10; கூடுதல் கல்வித் தகுதிக்கு, 5; பிளஸ் 2 என்றால், 2; இளநிலை பட்டம் மற்றும் அதற்கு மேல், 3 மதிப்பெண் வழங்கப்படும். ஆய்வக உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் இருந்தால், 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம், 167 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.  பணி அனுபவத்துக்கு, அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில், 2015, மே, 6க்குள் பணிபுரிந்தால், அந்த அனுபவ காலம் கணக்கிடப்படும். இதற்கு, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மாவட்
பழைய ரேஷன் கார்டுகளை திருப்பி தர தேவையில்லை! புதிதாக வழங்கப்படும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற்ற பின், பழைய ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்ற தவறான தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருவதால், உணவு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த கார்டு, ரேஷன் கடைக்கு வந்ததும், கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' பற்றிய எஸ்.எம்.எஸ்., வரும். அதை, ஏழு தினங்களுக்குள், ரேஷன் கடைக்கு சென்று, ஊழியரிடம்  தெரிவித்ததும், ஸ்மார்ட் கார்டு தரப்படும். அப்போது, பழைய கார்டை, கடைகளில் ஒப்படைக்க தேவையில்லை. ஆனால், சிலர், 'ஸ்மார்ட் கார்டு பெறும் வேளையில், பழைய ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டி இருப்பதால், அதனை முழுவதுமாக, 'ஸ்கேன்' அல்லது நகல் எடுத்து கொள்ளவும்' என, வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பி வருகின்றனர்.  இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர், ஸ்மார்ட் கார்டு பெறும் போது, பழைய கார்டை கடைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதில், &#
1,861 மையங்களில் 'டெட்' தேர்வு : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30லும் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, மார்ச், 23ல், முடிந்தது.  இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, 8.47 லட்சம் விண்ணப்பங்கள் விற்றன. அவற்றில், இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேர்; பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஐந்து லட்சத்து, இரண்டாயிரத்து, 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா மேற்கொண்டு வருகிறார். தேர்வுக்கு, 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள், ஏப்., 29 தேர்வுக்கானவை. தற்போது, முதுநிலை பட்டதாரி ஆசி