Posts

Showing posts from February 18, 2024
Image
  விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் வேலை! தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு தகுதியானவர் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அறிவிப்பு எண்.01/2024 தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, சென்னை மாநகராட்சி, சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் (Secondary Grade Teacher) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.  தகுதி: விண்ணப்பதாரா் பிளஸ் 2 வகுப்பு தோச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியா் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்; ஆசிரியா் தகுதித் தேர்வு ('டெட்') முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் வயதுவரம்பு: 1.7.202
Image
  நாளை தமிழக பட்ஜெட் - ஆசிரியர்களுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு பல்வேறு ஆசிரியர் அரசு ஊழியர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் இந்த வேலையில் தமிழக அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறது குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இதில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முதலமைச்சரின் வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடைநிலை ஆசிரியர்கள் நாளை முதல் போராட்டம் அறிவித்துள்ளதால்  ஊதிய முரண்பாடு குறித்த  அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. EL சரண்டர் மற்றும் உயர் கல்வி ஊக்கு ஊதியம் போன்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அதற்கான தீர்வுகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர் 2024–25-ம் நிதியாண்டு
Image
  காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; TNPSC அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.
Image
 தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு