28 July 2022

 எஸ்ஐ பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது



காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.



முன்னதாக, தமிழக காவல்துறையில் 444 சார்பு ஆய்வாளர்கள் (தாலுக்கா, ஆயுதப்படை) பதவியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு பொது விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 25ம் தேதியும், காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 26ம் தேதியும் நடைபெற்றது.


முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் திறன் போட்டி, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.


எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெற்றது. முதல் பிரிவில் தமிழ் மொழி தகுதித் தேர்வாகவும், இரண்டாவது பிரிவு பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வாகவும் நடைபெற்றது.


எழுத்துத் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக பொது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும், துறை விண்ணப்பதாரர்கள் 30 மதிப்பெண்களும் பெறவேண்டும். இருப்பினும், அடுத்த கட்டத் தேர்வான அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கையில் 1:5 என்ற விகிதாச்சாரப்படி விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.


இதே போன்று நேர்காணலுக்கு, மொந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் 1:2 என்ற விகிதாச்சாரப்படி விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.


தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி:


tnusrb.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.



இப்போது, List of candidates eligible for next phase of selection (Enrolment No. wise) என்பதைக் கிளிக் செய்யவும். பொது விண்ணப்பதாரர்கள், துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் எனத் தனித்தனியாக தேர்வு முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை கிளிக் செய்தால் தகுதியானவர்கள் பட்டியல் கணினித் திரையில் தோன்றும். தகுதி பட்டியலை அச்சிட்டு (அ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு.. 2.11 லட்சம் பேர் விண்ணப்பம்




கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் வழியில் தொடங்கியது.



ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்சி முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனை அடுத்து நேற்றுடன் (27ம் தேதி) பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்தது.

கடந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு 1,74,071 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நடப்பாண்டில் 2,11 115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


கடந்தாண்டு 1,38,053 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்து 1,56,214 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதே சமயம் 1,67,387 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க கட்டணங்களை செலுத்தியுள்ளனர். இந்த மாணவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


தமிழகத்தில் 1,35,554 பொறியியல் இடங்கள் உள்ளன. கடந்தாண்டு 80,524 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிகரித்து சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளதால் நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியீடு?





நீட் தேர்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வர்கள் உத்தேச விடைகளை பெற வேண்டுமானால் தேசிய தேர்வு முகமை இணையதளத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் என பல்வேறு பயிற்சி நிறுவனங்களும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இயற்பியல் 45, வேதியியல் 45, உயிரியியல் 90 என நீட் வினாத்தாள் தொகுப்பு 180 கேள்விகளைக் கொண்டது. ஒவ்வொரு வினாவும் 4 மதிப்பெண்கள் உடையது. சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் அளிக்கப்படும், தவறான விடைக்கு மொத்த மதிப்பெண்களில் இருந்து ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.


எனினும், விடைகுறிப்பின் மேல்முறையீடு செயல்முறை முடித்தபின், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் சரியானவை எனத் தெரிய வரும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்வகை சரியான தேர்வுகளை குறித்தமைக்கு நான்கு (+04) மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான தேர்வுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் (-1), தேர்வு செய்யாத அல்லது முயற்சி செய்யப்படாத வினாக்களுக்கு எந்த மதிப்பெண்ணும் வழக்கப்படாது.


ஒருவேளை, ஏதேனும் ஒரு வினா விடுவிக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ அனைத்து தேர்வர்களுக்கும் நான்கு (+4) மதிப்பெண்கள், தேர்வர் வினாவை முயற்சித்திருந்தாலும், எழுதாமல் விட்டிருந்தாலும் அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நீட் தேர்வர்கள் தாங்கள் எந்த மதிப்பெண் பெறுவோம் என எதிர்ப்பார்த்து உள்ளனர்.


இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை அதிகாரப்பூர்வாக வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை தேசிய தேர்வு முகமை தனது இணையதளமான neet.nta.nic.in என்ற பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. உத்தேச விடைகள் தொடர்பாக எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரியப்படுத்த தேர்வருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

 பிளஸ் 1 காலியிடங்களுக்கு நாளை முதல் சேர்க்கை கலந்தாய்வு




காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு காலியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.



இதுகுறித்து காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-23 ஆம் கல்வியாண்டில் காரைக்கால் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான சோக்கை முடிவுற்றது. அதன் தொடா்ச்சியாக மேல்நிலைப் பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை 2 ஆம் கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்ப மாவட்ட ஆட்சியா், பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் வழிகாட்டுதல் அளித்துள்ளது.


இதுவரை 11 ஆம் வகுப்புக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சேராத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பாக கலந்தாய்வு நடத்தி சோக்கை ஆணை வழங்கப்படவுள்ளது.


அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கு மாணவா்கள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 29, 30 ஆம் தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். குடியிருப்பு சான்றிதழ் பெறாத மாணவா்கள், 30 ஆம் தேதி மதியம் கலந்தாய்வுக்கு வரவேண்டும்.


வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலை 10 முதல் பகல் 1 மணி வரை 299 முதல் 465 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும், சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை 239 முதல் 298 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும், சனிக்கிழமை பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரை 175 முதல் 238 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டும்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...