Posts

Showing posts from June 18, 2023
Image
  12 அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - கணிதம், இயற்பியல் பாடத்தை நீக்க உத்தரவு மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துஅரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், கூடலுார், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வ
Image
  தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஜூன்-20 முதல் விண்ணப்பிக்கலாம்.. முக்கிய அறிவிப்பு.!!! தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஜூன் இருபதாம் தேதி முதல் தங்களுடைய ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் எட்டாம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. நடப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஜூன் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தோடு 500 ரூபாய் கூடுதல் செலுத்தி தட்கல் முறையிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
Image
 M.B.B.S., B.D.S மருத்துவப் படிப்பிற்கு இந்த வாரம் முதல் விண்ணப்பம்! தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துப்படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு இந்த வாரம் விண்ணப்பம் வழங்கப்படும் எனவும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கும் வகையில் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வினை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து, மாணவர்களுடன் தாெலைபேசி மூலம் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்பாேது, ''மனநல ஆலோசனைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு மே மாதம், 104 தொலைபேசி மருத்துவ மற்றும் தகவல் மையம் சேவை மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்ப
Image
  NEET 2023 Cut Off: நீட் தேர்வு கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்? நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும் இந்த ஆண்டு நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும்? பொறியியல் கட் ஆஃபில் மாற்றங்கள் இருக்குமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம். நாடு முழுவதும் மே 7 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வருண் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர். டாப் தரவரிசையில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தநிலையில், நீட் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாடு மாணவர்களின் ஒட்டுமொத்த தகுதி சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 78,293 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 54.45. அதேநேரம் 2022 இல் 99,610 மாணவர்கள் எழுதி, 57,213 மாணவர்கள் தேர்ச்ச
Image
  மாணவர் சேர்க்கை குறைந்ததை காரணம் காட்டி பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் வகுப்புகளை மூடக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்ததை காரணம் காட்டி பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் படிப்புகளை நிறுத்தக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மாணவர் சேர்க்கைக் குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு படிப்புகளை நிறுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.  மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் புதிய பட்டப்படிப்புகளைத் தொடங்குவது வரவேற்கத்தக்கது தான். ஒரே ஒரு மாணவர் சேர்ந்தாலும் அவருக்காக அந்தப் படிப்பு நடத்தப்பட வேண்டும். கணிதப் பாடம் கடினமானதாக இருப்பதால் அதில் சேர மாணவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம் தான் அடிப்படை ஆகும்.  எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுவது, கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங