29 April 2024

 நீட் தேர்வு 2024: ஹால் டிக்கெட் ரிலீஸ் எப்போது? கடந்த ஆண்டு தேர்வுக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு வெளியானது?



தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வுக்கான (NEET UG) ஹால் டிக்கெட்டை வெளியிட உள்ளது. மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.


நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கு, ஜூன் 29 ஆம் தேதி சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டது, ஜூலை 12 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, ஜூலை 17 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இறுதியாக, முந்தைய (2023) ஆண்டில், நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தேர்வுக்கு முன்னதாக மே 4 அன்று அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது.


நீட் தேர்வு ஹால் டிக்கெட் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?


படி 1: exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ நீட் இணையதளத்தைப் பார்வையிடவும்


படி 2: முகப்புப் பக்கத்தில் "NEET அட்மிட் கார்டு 2024" பதிவிறக்க அறிவிப்பைக் கண்டறியவும்.


படி 3: இணைப்பைக் கிளிக் செய்யவும், நீங்கள் உள்நுழைவு பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.


படி 4: உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.


படி 5: "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.


படி 6: அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும் (அது PDF வடிவத்தில் இருக்கும்) மற்றும் எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


நீட் தேர்வு தேதி


மே 5, 2024 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 02:00 மணி முதல் மாலை 05:20 மணி வரை நாடு முழுவதும் (557 நகரங்கள்) மற்றும் வெளிநாடுகளில் (14 நகரங்கள்) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (UG) - 2024 ஐ நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில் நடைபெறும்.


நீட் தேர்வு முறை 


நீட் தேர்வு 180 பல தேர்வு கேள்விகளை (MCQs) கொண்டுள்ளது. இந்தத் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களைக் கொண்டது. விண்ணப்பதாரர்கள் தேர்வை முடிக்க 3 மணி நேரம் 20 நிமிடங்கள் உள்ளன. சரியான விடைகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (எதிர்மறை மதிப்பெண்) கழிக்கப்படும். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவதில்லை.

 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி




ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.


இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது.


தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...