Posts

Showing posts from October 31, 2013
இரட்டைப்பட்டம் வழக்கு 13.11.2013 -புதன்கிழமை அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இன்று (31.10.2013) முதல் அமர்வில் 36வது வழக்காக விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு 13.11.20.13 -புதன்கிழமை அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று 11.40க்கே தன் எல்கையை தொட்ட இந்தவழக்கில் அனைத்து தரப்பு வழக்குரைஞர்களும் வாதாடதயாராகவே இருந்தனர். ஆனால்தலைமை நீதியரசர் தன்னுடையபெஞ்ச் இன்று விசாரணைக்கு தயாராகஇல்லை என்று வழக்கை வருகிற13.11.2013 அன்று ஒத்தி வைத்தார். இதனால் அங்கு குழுமியிருந்த ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்கின் முடிவை பொறுத்து அமையும்: ஐகோர்ட்  "ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில்,தேர்வு மற்றும் நியமனங்கள்,வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த,வழக்கறிஞர்,எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு: ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, "ஆசிரியர் தகுதி தேர்வில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு,தகுதி மதிப்பெண்ணில், 5சதவீதம் தளர்த்தலாம்" என,கூறப்பட்டுள்ளது.11மாநிலங்களில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு,தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில்,பிற்படுத்தப்பட்டோர்,இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தளர்த்தப்பட்டுள்ளது.  தமிழகத்திலும்,தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி,தாக்கல் செய்த மனு,நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,கடந்த,மே மாதம்,ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு,தகுதி மதிப்பெண்ணை தளர்த்தினால்,புதிய தேர்வு தேவையில்லை.எனவே,புதிய தகுதி தே
பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு உயர்நீதிமன்றம் அபராதம் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பதில்களில் குளறுபடி தொடர்பான வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யாததால், தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அபராதம் விதித்தது.   ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகளில் 9 விடைகள் தவறாக உள்ளதாக நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சூரியா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். கடந்த 22ஆம் தேதி இந்த மனு விசாரிக்கப்பட்ட போது இதற்கு பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு உத்தரவிட்டு இருந்தார்.   இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போதும் ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை.  இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஓராண்டாக இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்வதற்கு தேர்வு வாரியம் சார்பில் அடுத்தடுத்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மனுதாரர் மனரீதியாக பாதி