Posts

Showing posts from February 7, 2024
Image
  ஒரே கையெழுத்தில் ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தி உள்ளோம் - அமைச்சர் அன்பில்மகேஷ் ஆசிரியைகளுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு அளித்து உத்தரவிட்ட இந்த அரசு, பெண்களுக்கு எதிராக அரசாணை கொண்டு வரவில்லை என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.  பள்ளிக் கல்வித்துறையில் அரசாணை எண் 243 (மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் மாற்றம்) வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நன்றி அறிவிப்பு மாநாடு நடந்தது.  இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆசிரியர்கள் சார்பில் கலைஞர் நூற்றாண்டு குறித்து எழுதிய ‘கல்வியில் கலைஞர்’ என்ற நூலை வெளியிட்டு பேசியதாவது: 53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே கையெழுத்தை போட்டு ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய திமுக இயக்கத்தை சேர்ந்தவன் நான். அரங்கத்துக்கு வெளியில் இருப்பவர்களும் இதை கேட்க வேண்டும். இந்த அரசாணை பெண்களுக்கும் எந்த வகையில் பயன்தரும் என்பதை ஆராந்து பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் மீது எந்த பாதகமான நடவடிக்கையும் எடுக்ககூட
Image
 TANCET, CEET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
Image
மார்ச் மாதத்திலே கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மாநில தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கி உள்ளார். அதன்படி தேர்வு நடைபெறும் தேதியில் தேர்தல் நடைபெறாது எனவும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் நடப்பு ஆண்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டுள்ளார். அதில் "மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டு வருகிறோம். அதன்படி மார்ச் மாதத்திலே செமஸ்டர் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Image
  JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வுக்கான விடைக் குறிப்புகள் வெளியீடு: ஆட்சேபிப்பது எப்படி? ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் அமர்வுக்கான விடைக் குறிப்புகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. இதை ஆட்சேபிப்பது எப்படி என்று பார்க்கலாம். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன.24ஆம் தேதி தொடங்கின. குறிப்பாக தாள் 2ஏ மற்றும் தாள் 2பி ஆகியவற்றுக்கான தேர்வுகள் காலை 9 முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் தேர்வுகள் நடைபெற்றன. இதில் தாள் 2 ஏ தேர்வுகள், தாள் 2பி-ல், பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் தேர்வுகள் மதியம் 3 முதல் 6 மணி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் ந
Image
  ஆசிரியர்களுக்கு பேரிடியான அரசாணை.. நம்பர் 243 இல் இருப்பது என்ன? ரத்து செய்ய சொல்லும் ராமதாஸ் ஆசிரியர்களுக்கு பேரிடியாக வந்து இருக்கும் அரசாணை எண் 243-ஐ தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் விடுத்து உள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பறித்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களிடம் இருக்கும் உரிமைகளையும் அரசு பறிப்பது கண்டிக்கத்தக்கது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.  அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத தமிழக அரசு, இப்போது அரசாணை 243 என்ற பெயரில் அவர்களின் மீது பேரிடியை இறக்கியுள்ளது.