Posts

Showing posts from December 9, 2021
  அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பரவிய விவகாரத்தில் தேர்வருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்த தேர்வுகள் 8.12.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 8.12.21 அன்றைய தேர்வு சார்பாக whatsappல் தகவல் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 8.12.2021 பிற்பகல் நடத்தப்பட்ட ஆங்கிலப் பாட வினாத்தாள் தேர்வு நேரம் பிப 2.00 மணி முதல் 5.00 மணி முடிந்த உடனேயே whatsappல் 5.13 மணிக்கு விடைகள் குறிப்பிட்டு வினாத்தாள் தேர்விற்கு முன்பே வெளிவந்ததாக audio messageல் தரப்பட்டுள்ளது. இதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் விளாத்தாள், ஒவ்வொரு தேர்வருக்கும் வினாக்களும், வினாக்களுக்கான விடைகளும் Randomize செய்யப்படுகிறது. ஒரு தேர்வருக்கு வழங்கப்படுவது போல பிரிதொரு தேர்வருக்கு இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை. மேலும
  அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக மாற்றம் - முதல்வரின் ஒப்புதல்? தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது குறித்த பெரும் சர்ச்சைகள் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் நிலையில், தற்போது இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர்கள் வழக்கமாக அவர்களின் 58 வயதில் ஓய்வு பெறுவதற்கான வரைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று பரவல் தமிழகத்தில் பரவி வருவதால் அரசு கொரோனா நோய் தடுப்பு நடைமுறைகளுக்காக அதிக அளவிலான நிதியை செலவிட நேர்ந்தது. மேலும், தொற்று அபாயத்தால் தொழில்களும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக முடங்கி இருந்தது. இதனால் தமிழகத்தில் அதிக அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அரசின் பொருளாதார சிக்கலை தீர்க்கும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு படியாக, கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 58ல் இருந்து 59 ஆக மாற்றப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு கால பணப்பலன்கள் கொடுக்கும் காலம் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா இரண்ட
  புதிய பாடத்திட்டத்துக்கு வினாவங்கி எப்போது? பெற்றோர், மாணவ மாணவியர் எதிர்பார்ப்பு புதிய பாடத்திட்டம் மாற்றிய பிறகு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வே நடத்தாத நிலையில், விரைவில் வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற, பயனுள்ளதாக இருக்கும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 2019ல், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது. புளூ பிரிண்ட் இல்லாமல், முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அட்டவணை வெளியிட்டு, தேர்வு நெருங்க இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது.கடந்தாண்டும் பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதற்காக, ஹைடெக் லேப் மூலம் ஆன்லைன் வழியாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.பாடத்திட்டம் குறைக்கப்பட்டதோடு, அரையாண்ட