9 December 2021

 அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பரவிய விவகாரத்தில் தேர்வருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்த தேர்வுகள் 8.12.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 8.12.21 அன்றைய தேர்வு சார்பாக whatsappல் தகவல் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 8.12.2021 பிற்பகல் நடத்தப்பட்ட ஆங்கிலப் பாட வினாத்தாள் தேர்வு நேரம் பிப 2.00 மணி முதல் 5.00 மணி முடிந்த உடனேயே whatsappல் 5.13 மணிக்கு விடைகள் குறிப்பிட்டு வினாத்தாள் தேர்விற்கு முன்பே வெளிவந்ததாக audio messageல் தரப்பட்டுள்ளது.

இதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் விளாத்தாள், ஒவ்வொரு தேர்வருக்கும் வினாக்களும், வினாக்களுக்கான விடைகளும் Randomize செய்யப்படுகிறது. ஒரு தேர்வருக்கு வழங்கப்படுவது போல பிரிதொரு தேர்வருக்கு இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை. மேலும் இதில் மிகக் கடுமையான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படுகின்றன. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு rough sheet / வெள்ளைத் தாள் மற்றும் பேனா அல்லது பென்சில் வழங்கப்படுவது நடைமுறையாகும்.

பூர்ணிமா தேவி, நாமக்கல் என்ற தேர்வர் இத்தாளினை பயன்படுத்தி கேள்வித் தாளில் உள்ள கேள்விகளை எழுதி அதனை மையத்தில் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்று Whatsappல் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. Whatsappல் பெறப்பட்ட கையினால் எழுதப்பட்ட 8 பக்கங்களில் உள்ள வினாக்களின் வரிசை எண் வினாக்கள் மற்றும் விடைகளும் (options) தேர்வருக்கு தேர்வின் போது கணினியில் வழங்கப்பட்ட வினாத்தாளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் அனைத்து வினாக்களும் ஒன்றாக உள்ளளன.

விடைகளும் வரிசை மாறாமல் அப்படியே உள்ளது. ஒவ்வொரு தேர்வருக்கும் தளித்தனி வினாக்கள் வழங்கும் நிலையில் இத்தேர்வருக்கு வழங்கப்பட்ட வினாக்களை மையத்தில் பெற்ற கூடுதல் வெள்ளைத் தாள்களில் எழுதி எடுத்துச் சென்று தேர்விற்கு பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாக இதன் மூலம் அறிய முடிகிறது. கேள்வித்தாள் தேர்விற்கு முன்பே வெளியாகவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய குற்றத்திற்காக மேற்கண்ட தேர்வர் மீது வாழ்நாள் தடை நடவடிக்கையும் தவறான தகவல்களை பரப்பியவர் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கையும் அவதூறு வழக்கு நடவடிக்கையும் எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக மாற்றம் - முதல்வரின் ஒப்புதல்?


தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது குறித்த பெரும் சர்ச்சைகள் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் நிலையில், தற்போது இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழக அரசு பணியாளர்கள் வழக்கமாக அவர்களின் 58 வயதில் ஓய்வு பெறுவதற்கான வரைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று பரவல் தமிழகத்தில் பரவி வருவதால் அரசு கொரோனா நோய் தடுப்பு நடைமுறைகளுக்காக அதிக அளவிலான நிதியை செலவிட நேர்ந்தது.


மேலும், தொற்று அபாயத்தால் தொழில்களும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக முடங்கி இருந்தது. இதனால் தமிழகத்தில் அதிக அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அரசின் பொருளாதார சிக்கலை தீர்க்கும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.


அதன் ஒரு படியாக, கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 58ல் இருந்து 59 ஆக மாற்றப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு கால பணப்பலன்கள் கொடுக்கும் காலம் தள்ளிவைக்கப்பட்டது.


அதன் பின்னர் கொரோனா இரண்டாம் அலை பரவலின் போது, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அரசின் முடிவு குறித்து அதிருப்தியில் இருந்து வந்தனர். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மேலும், அரசு 2021மே 30ம் தேதி முதல் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இறுதி ஆணை பொருந்தும் என்று அறிவித்தது.


இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் திமுக தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது தொடர்பான பல கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு முடிவான பதில் எதையும் அளிக்காமல் இருந்து வந்தது.


இந்நிலையில், தமிழக முதல்வர் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் வயது 58 ஆக மாற்ற முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் இந்த ஆணை வெளியிடப்பட்டு, ஜனவரி 1முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆணை வெளியிட்டாலும், தற்போது ஓய்வுக்கால பணபலன்கள் அளிப்பதற்கு பதிலாக அரசு பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 புதிய பாடத்திட்டத்துக்கு வினாவங்கி எப்போது? பெற்றோர், மாணவ மாணவியர் எதிர்பார்ப்பு


புதிய பாடத்திட்டம் மாற்றிய பிறகு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வே நடத்தாத நிலையில், விரைவில் வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற, பயனுள்ளதாக இருக்கும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 2019ல், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது.


புளூ பிரிண்ட் இல்லாமல், முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அட்டவணை வெளியிட்டு, தேர்வு நெருங்க இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது.கடந்தாண்டும் பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


இதற்காக, ஹைடெக் லேப் மூலம் ஆன்லைன் வழியாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.பாடத்திட்டம் குறைக்கப்பட்டதோடு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் மூலம், மாணவர்களை தயார்ப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, வினாவங்கி வெளியிட வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், 'பள்ளிகள் செப்., மாதம்தான் திறக்கப்பட்டன. எல்லா பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடக்கவில்லை. சிலபஸ் குறைக்கப்பட்டாலும், புளூ பிரிண்ட் இல்லாததால், வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற பயனுள்ளதாக இருக்கும். கணிதப்பாடத்திற்கு பயிற்சி வினாக்கள் தான் முழு மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும். விரைவில் வினாவங்கி வெளியிட வேண்டும்' என்றனர்

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...