TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.
இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம்முன் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடந்தாண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடந்த தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில், பள்ளிகல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைகளில் மட்டும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மை மொழி உள்ளிட்ட துறைகளில் ஆயிரத்து 260 பணி இடங்களுக்கான தேர்வு பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். அதனால், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
Subscribe to:
Posts (Atom)
டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...