Posts

Showing posts from April 27, 2023
Image
 'நீட் தேர்வு' 1.4 லட்சம் இடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பம்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர்? நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் எத்தனை பேர் என்ற விவரமும் வெளியாகி இருக்கிறது. நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. தற்போது மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ந
Image
  ஆசிரியர் தேர்வு மீண்டும் நடத்தப்படாது - அமைச்சர் அறிவிப்பு...!! தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை  தொடங்கியது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடமும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான டெட் தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் அதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதி 15 ஆயிரத்து 430 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் இந்த தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அமைச்சர் தற்போது பேசி இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த வருடம் மீண்டும் தேர்வு நடத்தப்படாது என்பதே இதில் தெரிய வந்துள்ளது.