27 April 2023

 'நீட் தேர்வு' 1.4 லட்சம் இடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பம்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர்?



நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் எத்தனை பேர் என்ற விவரமும் வெளியாகி இருக்கிறது.


நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. தற்போது மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.


அதன்படி, நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20.8 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும் 9 லட்சத்து 02 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படியில் ஒபிசி பிரிவு மாணவர்கள் 8.9 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.


மாநில வாரியாக அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். மகராஷ்டிர மாநிலத்தில் 2.77 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் 2.73 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள். ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் இதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


எனினும், நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் ஏற்கனவே அறிவித்த தேதியில் தேர்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்தாலும், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த தேர்வு நடைபெறும் முந்தைய ஆண்டுகளில் இதுபோலத்தான் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

 ஆசிரியர் தேர்வு மீண்டும் நடத்தப்படாது - அமைச்சர் அறிவிப்பு...!!



தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை  தொடங்கியது.



அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடமும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



அதேசமயம் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இந்த வருடத்திற்கான டெட் தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் அதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதி 15 ஆயிரத்து 430 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


இதனால் இந்த தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அமைச்சர் தற்போது பேசி இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இந்த வருடம் மீண்டும் தேர்வு நடத்தப்படாது என்பதே இதில் தெரிய வந்துள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...