Posts

Showing posts from November 3, 2013
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு. முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.   அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ் பாடத் தேர்வு வினாத்தாளில் 40 க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2770 பேர் அழைக்கப்பட்டு, கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.  ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாககடந்த 24ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில் வரும் 5 மற்றும் 6ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில், தற்போது அழைப்புக் கடிதம் பெற்றவர்களுடன், ஏற்கெனவே பங்கேற்க தவறியவர்கள