Posts

Showing posts from February 10, 2017
ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க TRB உத்தரவு. சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த  கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,  மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே  மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை,  பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய 
Image
TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம். - தினகரன் செய்தி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி  காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.ஆசிரியர் தேர்வு  வாரியத்தின் தலைவராக கடந்த  3 ஆண்டுகளாக ஐஏஎஸ்  அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள்  ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29, 30ம் தேதிகளில்  தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு  வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து  தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்க  உள்ளது.  தேர்வு நடத்துவது ெதாடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய  தலைவர் விபு நய்யாருக்கும், பள்ளிக் கல்வித்துறை  செயலாளர்சபீதாவுக்கும்இடையேகருத்துவேறுபாடுஇருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடுவதை விபுநய்யார் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதையடுத்து, விபுநய்யாரை டான்சிக்கு மாற்றி அரசு  நேற்று உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக உள்ளாட்சி
ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் திட்டம் -இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் அந்த வகுப்பைச் சேர்ந்த தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 என்ற வீதங்களில் ஒரு கல்வி ஆண்டில் கோடை விடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும்