Posts

Showing posts from December 29, 2021
  TRB வளாகத்தில் PG தேர்வர்கள் இன்று ( 29.12.2021 ) போராட்டம்.   TRB வளாகத்தில் இன்று 50 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். தேர்வர்கள் கோரிக்கை : நாங்கள் 2018-19 PGTRB தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து தகுதியான மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி வாய்ப்பு எங்களுக்கு மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம் எங்களுடன் தேர்வு எழுதியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ( 11.02.2020 ) பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர் ஆனால் எங்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாங்கள் நீதிமன்றம் நாடி நீதிமன்ற உத்தரவு பெற்றதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 16.11.2021 அன்று வெளியிடப்பட்ட Revised Provisional Selection List ல் நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். தாங்கள் கருணையுள்ளம் கொண்டு , மூன்றாண்டுகளாக பணி இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கு எங்களுக்கு பணிநியமன கலந்தாய்வு விரைவில் நடத்தி எங்களை பணியமர்த்தி எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என தேர்வர்கள் தெரிவித்தனர்.
  30.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.12.2021 பிற்பகல் 2.00 மணியளவில் EMIS இணையதளத்தில் வழியாக நடைபெறவுள்ளதால் சுழற்சிப் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களையும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ள தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிது.  மேலும் சுழற்சிப்பட்டியலில் உள்ள உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் EMIS பள்ளியின் UDISE முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ID No. மற்றும் அவர்கள் பணிபுரியும் No ஆகியவற்றை உடனடியாக widsetn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.