11 November 2021

 இல்லம் தேடி கல்வி: தன்னார்வலர்கள் தேர்வு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு



தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித்திட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது.


இந்த திட்டமானது மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நலனளிக்கும் திட்டமாக உள்ளது.


கொரோனா பெருந்தொற்றுப் (Coronavirus) பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள முடிவு செய்ய்யப்பட்டது.


'இந்த திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் தன்னார்வலர்கள், தொடர்ச்சியாக வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் (Tamil) தெரிந்திருக்க வேண்டும்.


தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். இந்த ஆர்வலர்களுக்கு குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான்னார்வளர்களை பதிவு செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டிருந்தது.


இதன்படி மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து இருக்கின்றனர். இவர்களில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தது.



இதன் தொடர்ச்சியாக, இன்று, விண்ணப்பித்திருக்கும் தன்னார்வகளை தேர்தெடுப்பதற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு (TN Government) வெளியிட்டிருக்கிறது. அதன்படி குழந்தைகளை கையாளுவதற்கான திரனறிவு தேர்வு நடத்தப்பட வேண்டும், இதில் பங்குகொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தேர்வு நடக்க வேண்டும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களை கையாளுப்பவர்களுக்கான கல்வித் தகுதி 12-ம் வகுப்பாகவும், 6 முதல் 8 அம் வகுப்பு மாணவர்களை கையாளுப்பவர்க்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஏதாவது ஒரு சந்தர்பத்தில், இதில் தேர்வு செய்யப்பட்டவர் இப்பணிக்கு தகுதியானவர் இல்லை என்பது தெரியவந்தால் உடனடியாக அவர் நீக்கப்படுவார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

 கனமழை காரணமாக இன்று (12.11.2021) 11 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


1.சென்னை 


2.காஞ்சிபுரம்


3.செங்கல்பட்டு


4. திருவள்ளூர்


5.திருவண்ணாமலை 


6.கடலூர்( பள்ளிகளுக்கு மட்டும்)


.7. விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்)


8.வேலூர்

9. ராணிப்பேட்டை( பள்ளிகளுக்கு மட்டும்)

10.நீலகிரி


11. சேலம் ( பள்ளிகளுக்கு மட்டும்)

 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய எட்டு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.


இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களின் பயம் போகும் வழியில் அரையாண்டு, முழு ஆண்டு தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆங்கில வழி பாடப் பிரிவுகளை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

 இன்று (11-11-2021)கனமழை காரணமாக 20 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 



 தேர்வு முறைகேடு வெட்கக்கேடான நிகழ்வு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

TNPSC - குரூப்-4 தேர்வு முறைகேடு வெட்கக்கேடான நிகழ்வு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2016ஆம் ஆண்டு தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த குரூப் 4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால்தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர முடியும். எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.



இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துவரும் சூழலில், இதுவரை 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 98% விண்ணப்பதாரர்கள், 2 அரசு ஊழியர், 1 ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் தரப்பில் கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயர் அதிகாரிகள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், முறைகேடு நடந்ததாக கூறப்படும் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் இல்லை என பதிலளிக்கப்பட்டது.




அதற்கு நீதிபதிகள், "தேர்தல்களின்போது ஒரு வாக்குச்சாவடியில் இதுபோல முறைகேடு நடந்ததாக பிரச்னை எழுந்தாலும், தேர்தல் ரத்து செய்யப்படும் சூழலில், இந்த தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டும் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில், தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாள்களை கொண்டு சென்றபோது, வழியிலேயே இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...