Posts

Showing posts from May 29, 2014
TNPSC DEO EXAM :709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 8-ந்தேதி காலை DEO பதவிக்கு முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 2342 உள்ளன. எழுத்து தேர்வு நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 20000 பேர் விண்ணப்பித்தனர்.  அவர்களில் 709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன. . பெரும்பான்மையான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு உரிய கல்வித்தகுதி இல்லாததே காரணம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்  மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதல் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது Teachers Recruitment Board College Road, Chennai-600006 TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 Certificate Verification for Absentee Candidates As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 for Paper -1 on 17.08.2013 & Paper-II on 18.08.2013 and Provisional result and final answer key were published on 05.11.2013 in the TRB website.  The Board had already conducted Certificate Verification process for those entire candidates who have secured minimum eligible marks in Paper-1 & Paper II on various dates. Inspite of repeated opportunities which were already given to the candidates, certain candidates have absented themselves from the above mentioned certificate verification.  Now the Board has decided to give an one time final opportunity for the absentee candidates and release the Ce
கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு  பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.  ஆசிரியர் பற்றாக்குறை: அதன்படி, ஆரம்ப பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்ற வீதத்திலும், 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 1:35, 9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 1:40 என்ற வீதத்தில் இருக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், அறிவியல் பிரிவு வகுப்பாக இருந்தால், 1:40 என்ற வீதத்திலும், தொழிற்கல்வி பிரிவு வகுப்பாக இருந்தால், 1:25 என்ற வீதத்திலும் இருக்கலாம் என, கணக்கு உள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய வரையறையை விட, ஆசிரியர் - மாணவர் சதவீதம், குறைவாகவே உள்ளது. ஆரம்ப பள்ளிகளில், 10 முதல், 20 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை, பல இடங்
அமைச்சர் ஆலோசனையின்படி அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்  அமைச்சரின் ஆலோசனையின்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உபரியாக எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கணக்கெடுக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதனால் டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் வேலை கிடைக்காதோ என கலக்கம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுதேர்தல் விதிமுறைகள் கடந்த 18ம் தேதி நீக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் டிபிஐ வளாகத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்கள் வழங்கவும், ஜூன் 2ம் தேதியே பாடப் புத்தகங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  மேலும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உ