29 May 2014

TNPSC DEO EXAM :709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 8-ந்தேதி காலை DEO பதவிக்கு முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 2342 உள்ளன. எழுத்து தேர்வு நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 20000 பேர் விண்ணப்பித்தனர். 

அவர்களில் 709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன. . பெரும்பான்மையான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு உரிய கல்வித்தகுதி இல்லாததே காரணம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதல் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது

Teachers Recruitment Board College Road, Chennai-600006 TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 Certificate Verification for Absentee Candidates As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 for Paper -1 on 17.08.2013 & Paper-II on 18.08.2013 and Provisional result and final answer key were published on 05.11.2013 in the TRB website. 

The Board had already conducted Certificate Verification process for those entire candidates who have secured minimum eligible marks in Paper-1 & Paper II on various dates. Inspite of repeated opportunities which were already given to the candidates, certain candidates have absented themselves from the above mentioned certificate verification. 

Now the Board has decided to give an one time final opportunity for the absentee candidates and release the Certificate Verification list herein. Candidates are advised to download the Certificate Verification letters and other relevant forms and attend the certificate verification as per the schedule given therein (10.06.2014 to 13.06.2014). It is also decided to give one final chance to all those candidates who have not submitted the required certificates during the earlier certificate verification process.

 No separate intimation will be given. All such candidates are informed that this will be final chance and no other chance shall be given. Utmost care has been taken in preparing the certificate verification list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement. 

Dated: 29-05-2014                                                                                              Member Secretary
கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு 

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. 

ஆசிரியர் பற்றாக்குறை: அதன்படி, ஆரம்ப பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்ற வீதத்திலும், 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 1:35, 9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 1:40 என்ற வீதத்தில் இருக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், அறிவியல் பிரிவு வகுப்பாக இருந்தால், 1:40 என்ற வீதத்திலும், தொழிற்கல்வி பிரிவு வகுப்பாக இருந்தால், 1:25 என்ற வீதத்திலும் இருக்கலாம் என, கணக்கு உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய வரையறையை விட, ஆசிரியர் - மாணவர் சதவீதம், குறைவாகவே உள்ளது. ஆரம்ப பள்ளிகளில், 10 முதல், 20 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை, பல இடங்களில் உள்ளது. தேவையை விட, பல பள்ளிகளில், கூடுதல், ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அதே நேரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது. 

இந்த சமநிலையற்ற நிலையை மாற்றி, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. தேவையை விட, கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து, இரு துறைகளும் விவரம் சேகரித்துள்ளன. 

பள்ளி திறப்பதற்குள்...: அதனடிப்படையில்,இரண்டிலும், கூடுதலாக உள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, இரு துறை அதிகாரிகளும், முடிவு செய்துள்ளனர். பள்ளி திறப்பதற்குள், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது. 

இந்தப் பணி முடிந்த பின், ஜூன், இரண்டாவது வாரத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, தெரிகிறது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி நிரவல் (டெப்ளாய்மென்ட்) நடவடிக்கையால், ஆசிரியர்கள், பீதி அடையத் தேவையில்லை. தற்போது ஆசிரியர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் தான் மாற்றம் இருக்கும். வேறு மாவட்ட மாறுதல், பெரும்பாலும் வராது' என்றார்.
அமைச்சர் ஆலோசனையின்படி அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தொடக்கம் 

அமைச்சரின் ஆலோசனையின்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உபரியாக எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கணக்கெடுக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை தொடங்கியுள்ளது.

இதனால் டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் வேலை கிடைக்காதோ என கலக்கம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுதேர்தல் விதிமுறைகள் கடந்த 18ம் தேதி நீக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் டிபிஐ வளாகத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்கள் வழங்கவும், ஜூன் 2ம் தேதியே பாடப் புத்தகங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வந்த பிறகு பணி நிரவல் செய்துவிட்டு அதற்கு பிறகே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கு பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிஇடி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குசான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ளது. பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குபொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள். 

 ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்ட உபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம் நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுகுறித்து டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் தரப்பில் கேட்டபோது, டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்ப்பு முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 12,000 ஆசிரியர்கள்தான்நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஆனால் இப்போது இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்து முடித்துவிட்டு பட்டதாரிகளுக்குபணி நியமனம் வழங்கப் போவதாக தெரிவிக்கின்றனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம். இதனால் டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காது. 

கடந்த ஆண்டு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் போக இன்னும் சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது பணி வழங்குவார் கள். ஆகவே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குமுதலில் பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு, இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த குழப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை தீர்க்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு ...