Posts

Showing posts from June 29, 2014
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் வெளியீடு!  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் இணையத்தில் வெளியீடப்படும் . சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு வாரங்களில் தேர்வு முடிகளும் வெளியிடப்படும் என்று பாலசுபிரமணியன் கூறியுள்ளார்.  தமிழகம் முழுவதும் அரசு விதிகளின்படி 2,846 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விடைநகல் தேர்வு முடிவையும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.
வழக்குத் தொடர்வோம்! வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB. கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையை படைத்திற்குக்கிறது. இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடு சென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.  ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள கல்வி முறை,விவசாயம், பொருள் உற்பத்தி போன்றவற்றை தான் சார்ந்துள்ளது. விவசாயம் குறித்த எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் இல்லை. நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் இல்லை.விளைவு நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நட்ட பயிர்கள் யாவும் நாசமாய் போய்விட்டது.  AK 47 முதல் PK 57 வரை தொழிற்சாலையில் அவர்கள் எதை வேண்டுமானால் தயாரிக்கலாம்.ஆனால் மனிதன் உயிர் வாழத் தேவையானவற்றில் ஒரே ஒரு நெல் மணியைக் கூட அவர்களால் தயாரிக்க முடியாது. உலக மயமாக்கல் என்ற பெயரில் அயல் நாட்டு தொழிற்சா
FLASH NEWS; முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன.  ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன.   GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M.   SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB  2013  26.WP.28640/2013  82.WP.28647/2013  84.WP.28893/201  85.WP.28902/2013  86.WP.29346/2013 TO WP.29349/2013  87.WP.29539/2013 88.WP.29555/2013  89.WP.29564/2013 91.WP.29605/2013  94.WP.29987/2013 95.WP.30006/2013  103.WP.30927/2013  116.WP.31294/2013  119.WP.31352/2013  128.WP.31590/2013  129.WP.31674/2013  132
டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.  ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அ
இன்று குரூப் 2 ஏ தேர்வு உதவி ஆணையாளர் உள்பட 2269 பணியிடங்களுக்கான குரூப் 2 ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அரசின் பல்வேறுத் துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 2269 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இத்தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வினியோகிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 32 மாவட்டங்களில் 240-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இத்தேர்வை கண்காணிக்கவும் மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.