Posts

Showing posts from April 25, 2014
தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளில் தளர்வு: வாக்கு எண்ணிக்கை வரை புதிய அறிவிப்புகள் வெளியிட தடை தமிழகத்தில் நேற்று மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவோ, புதிய அறிவிப்புகள் எதனையும் வெளியிடவோ கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,