Posts

Showing posts from June 24, 2017
B.Ed படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்: 30-ம் தேதி கடைசி நாள் தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14அரசு உதவி பெறும் கல்வி யியல் கல்லூரிகளிலும் உள்ள பிஎட் இடங்களில் 1,777 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன. இதில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 21-ம் தேதி முதல்வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் லெடி வெலிங் டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனம் உட்பட 13 கல்வியியல் கல்லூரி களில்  வரும் 30-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலை சுயசான்றொப்பமிட்டு இந்த சலுகை கட்டணத்தில் விண் ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் ஜூலை 3-ம் தேதிக்குள் ‘செயலர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005’ என்ற முக வரிக்கு அனுப்ப வேண்டும். கல் வித்தகுத
SSLC Examination June /July - 2017 Hall Ticket download CLICK HERE......
TNEA 2017 Rank List Released: Anna University Rank, Merit List & Counselling Dates @ tnea.ac.in , annauniv.edu TNEA 2017 Rank List:  Click Here  (Released) TNEA Rank List 2017:  The  Anna University  has invited candidates for admissions through merit based. Recently,  TNEA Random Number 2017  has released @ tnea.ac.in. As per the schedule, authorities have uploaded TNEA 2017 Rank List on its official web portal at  tnea.ac.in, annauniv.edu.  The Top Rank holders may get more chances to select in the college. According to the  tnea.ac.in  report, today on  June 22  the Anna University Rank Card has released. Candidates shall get your TNEA Merit List by entering your Application Number & Date of Birth (DOB). The Random Number is essential to sort the ranks. The TNEA 2017 Rank List is allotted based on Cutoff Score, Fourth Subject Score, Date of Birth and Random Number. Tamilnadu Engineering Admissions  (TNEA ) is provided by Anna University. It is a technical univers
Image
NEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள்  (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை.  இந்தியா முழுவதும் 11,38,890 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். இதில் மாணவர்கள், 4,97,043. மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,11,539 பேர். மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221. மாணவிகள், 3,45,313. தேர்வெழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.  4,78,546 பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்திருக்கிறது இந்தத் தேர்வு. நீட் தேர்வை எழுதிய 80 சதவீதம் பேர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்கள். 10 சதவீதம் பேர் இந்தியில் எழுதினார்கள். 15,206 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வை எழுதியுள்ளார்கள். ஆங்கிலம்,
‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து விலக்கு கோரியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 7-ந்தேதி நடைபெற்ற இந்த தேர்வில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் எழுதினார்கள். தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதற்கிடையே நீட் தேர்வில் கேள்விகள் பாரபட்சமாக இருந்ததாக கூறி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்