Posts

Showing posts from November 28, 2021
  வினாத்தாள் கசிந்ததால் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து! லக்னோ,உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்தது. முதல் ஷிப்ட் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை 2,554 மையங்களிலும், 2-ஆம் ஷிப்ட் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை 1,754 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, வாட்ஸ்-ஆப்பில் வினாத்தாள் கசிந்ததுள்ளது. இதன் காரணமாக உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  வினாத்தாள் கசிந்த செய்தி வெளியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் எஸ்.டி.எஃப்.( STF) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லக்னோவில் 4 பேர், ஷாம்லியில் 3 பேர், அயோத்தியில் 2 பேர், கௌசாம்பியில் ஒருவர் மற்றும் பிரயாக்ராஜில் 13 பேரை எஸ்.டி.எஃப். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 13,52,086 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இருந்த நிலையில், இன்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த ஒரு மாதத்
  உத்தரபிரதேச ஆசிரியர் தகுதி தேர்வு... வாட்ஸ்ஆப்பில் வெளியான வினாத்தாள் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் UPTET எனப்படும் மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெறுபவர்கள் மட்டுமே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி பெறுவார்கள். இந்த தேர்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்காக லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தார்கள். இந்த நிலையில், வினாத்தாள்கள் வாட்ஸ்ஆப்பில் வெளியாக மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேச கல்வித்துறை அமைச்சர் சதீஷ் திவிவேதி கூறியதாவது- ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்வை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளோம். இதற்கு விண்ணப்பித்தவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் மீண்டும் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்கலாம். வினாத்தாள் வெளியானது தொடர்பாக வழக்கு பதிவு செய
கனமழை காரணமாக நாளை (29.11.2021) 21 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் : 1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி )  2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி )  3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி )   4. திருவாரூர் ( பள்ளி மட்டும்)  5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி )  6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி ) 7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி ) 8. நாகை ( பள்ளி மட்டும்)  9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் ) 10. கடலூர்  ( பள்ளி மட்டும்)  11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி) 12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் ) 13. பெரம்பலூர் ( தொடக்க பள்ளி , நடுநிலைப்பள்ளி)  14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி) 15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் ) 16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி) 17. அரியலூர் (பள்ளி மட்டும் ) 18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி) 19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி) 20. சேலம் (பள்ளி மட்டும் ) 21. வேலுர் (பள்ளி மட்டும் ) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
Image
  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க அரசு முடிவு.