Posts

Showing posts from April 1, 2023
Image
  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா..? எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வரும்தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – இளங்கலை (NEET-UG)க்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி இரவு 9:00 மணிக்கு முடிவடைய உள்ளது.. அதாவது நீட் தெர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. NTA NEET UG விண்ணப்பப் படிவம் 2023 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் – neet.nta.nic.in இல் கிடைக்கிறது.   நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான படிகள் https://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ
Image
விளையாட்டு சிறப்புப் பள்ளிகள், அனைத்துப் பாடங்களுக்கும் தனி ஆசிரியர்கள்: கல்வித்துறையின் 26 அறிவிப்புகள் இவைதான்! விளையாட்டு சிறப்புப் பள்ளிகள், அனைத்துப் பாடங்களுக்கும் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பள்ளிக் கல்வித்துறையின் 26 அறிவிப்புகளையும் இங்கு காணலாம். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள் மற்றும் தவறான செய்திகளுக்கு எதிராக விழிப்புணர்வு வாரம் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் என்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ’’ * 2,996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.175 கோடி மதி
Image
  TNPSC Group 4 Results: உங்களுக்கு போஸ்டிங் வாய்ப்பு எப்படி? இன்னும் 3 ப்ராசஸ் இருக்கு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக என்னென்ன செயல்முறைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்தக்கட்டமாக என்னென்ன செயல்முறைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம். தற்போது குரூப் 4 ரிசல்ட் ஒவ்வொரு தேர்வரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தரவரிசையானது ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் சாதி அடிப்படையிலான தரவரிசை என இரண்டு பிரிவாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஒரு பணியிடத்திற்கு 2 அல்லத
Image
  குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பாலமுருகன், மன்னார் வளைகுடா பாக் ஜல சந்தி கட்ச் வளைகுடா ஆகியவை இந்தியாவில் இருக்கிறது என்றும், ஆனால் ஆசியாவில் இல்லை என்றும் கூறியிருப்பது, சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . தான் படித்த பயிற்சி நிறுவனத்தில் பாராட்டு விழா நடந்த போது, எக்குத்தப்பாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது . கடந்த 24 ஆம் தேதி மாலை ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நன்றாக படித்தவர்களுக்கு சரியான மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தென்காசியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கிளை கடலூரில் இயங்கி வருகிறது . கடலூரில் படித்த பாலமுருகன் என்பவர், மாநில அளவில் குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நடத்திய பாராட்டு விழாவின்போது