Posts

Showing posts from December 1, 2023
Image
வினா-வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்  10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-வங்கி புத்தகங்கள் மீண்டும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநர்கள் நியமனம் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே உள்ளார்.அவருக்கு உதவியாக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
Image
  டிசம்பர் 9 & 10 - TBPSC தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித் தேர்வு) வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வௌியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில், ஆராய்ச்சி உதவியாளர், மேலாளர் (கால்நடை), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான எழுத்து தேர்வு (கணினி வழித் தேர்வு) வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Image
  மத்திய ரிசர்வ் போலீஸில் 26,146 காவலர் பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க! விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2023 மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் Border Security Force (BSF), Central Industrial Security Force (CISF), Central Reserve Police Force (CRPF), Indo Tibetan Border Police (ITBP), Sashastra Seema Bal (SSB), Secretariat Security Force (SSF) and Rifleman (General Duty) in Assam Rifles (AR) ஆகிய பிரிவுகளில் 26,146 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். கான்ஸ்